Grab the widget  IWeb Gator

Monday, December 5, 2011



 கம்ப்யூட்டருக்குப் புதியவரா! என்ன இருக்கிறது கம்ப்யூட்டருக்குள்?
 
     நாம் தினந்தோறும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகிறோம். ஆனால் பார்ப்பது எல்லாம் மானிட்டர் திரையைத்தான். உங்கள் கம்ப்யூட்டருக்குள் என்ன இருக்கிறது என்றாவது பார்த்திருக்கிறீர்களா? ஒரு சிலர் சிபியூ கேபினை மூடி வைத்த சிறிய பெட்டிக்குள் வைத்து இயக்குவார்கள். இயக்கும்போது மட்டும் அதனைத் திறந்து வைத்துக் கொள்வார்கள். எப்படி இருந்தாலும் அதன் வெளிப் புறத்தைத்தானே பார்க்கிறோம்.
சரி, கம்ப்யூட்டருக்குள் என்ன இருக்கப் போகிறது. மதர்போர்டு, ஹார்ட் டிஸ்க், டிரைவ்கள் மற்றும் இவற்றை இøணைக் கும் கேபிள்கள். இவற்றைப் பார்த்துப் பெரிதாக என்ன தெரிந்து கொள்ளப் போகிறோம். நாம் அறிந்து கொள்ள வேண்டியது எல்லாம் நம் ஹார்ட் டிஸ்க் கொள்ளளவு என்ன? சிப்பின் தன்மை என்ன? அதன் சைக்கிள் ஸ்பீட் என்ன? ராம் எவ்வளவு? இன்னும் எத்தனை போர்ட் உள்ளன? எத்தனை சாதனங்களை இணைக்கலாம்? ஓ.எஸ். எத்தனாவது பதிப்பு? அதில் சர்வீஸ் பேக் என்ன இணைந்துள்ளது? என்பவற்றை அறிந்து கொள்வதில்தான் நன்மையே உள்ளது.
அடேயப்பா எத்தனை விஷயங்கள்! இவற்றை எல்லாம் எப்படி அறிந்து கொள்வது? ஒவ்வொன்றாய் தெரிந்து கொள்ள முயற்சித்தால் நேரம் எவ்வளவு செலவாகும்? இதற்கெல்லாம் ஒரு வழி தரும் வகையில் சில சாப்ட்வேர் தொகுப்புகள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றில் சிறந்ததாக இரண்டு தெரிய வந்தன. அவை குறித்த தகவல்களை இங்கு காணலாம்.
முதலாவதாக CPUID என்ற நிறுவனம் தயாரித்து வழங்கும் CPUZ என்ற புரோகிராம். இது ஒரு டயாக்னஸ்டிக் புரோகிராம். அதாவது மேலே சொன்ன அனைத்து கம்ப்யூட்டர் பிரிவுகளையும் அலசி ஆராய்ந்து அதன் தன்மைகளை ஒரு டெக்ஸ்ட் பைலாகத் தரும் புரோகிராம். இதனை http://www.cpuid. com/cpuz.php என்ற தளத்தில் காணலாம். இதனை காப்பி செய்து உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவி இயக்கினால் கம்ப்யூட்டரில் உள்ள சிலிக்கான் பாகங்களின் இயல்பு அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
CPUZ புரோகிராமினைக் காட்டிலும் கூடுதல் திறன் கொண்ட புரோகிராம் ஒன்றினைக் காண முடிந்தது. அதன் பெயர் Sandra. இதனை வழங்குவது SiSoftware என்ற நிறுவனம். இது அடிப்படையில் இலவசமாய்க் கிடைக்கிறது. ஆனால் கூடுதல் தகவல்கள் பெற கட்டணம் செலுத்திப் பெறலாம். இலவசமாய்க் கிடைக்கும் புரோகிராமே நமக்குப் போதும். இது மேலே சொன்ன CPUZ புரோகிராம் தரும் அனைத்து தகவல்களையும் தருவதுடன் கூடுதலாகச் சில தகவல்களையும் தருகிறது. கம்ப்யூட்ட ரின் பிரிவுகள் அனைத்தும் இன்னும் சிறப்பாகச் செயல்பட சில பரிந்துரை களையும் தரும். இந்த புரோகிராமினை http://www.sisoftware.net என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாகப் பெறலாம்.
எனவே கம்ப்யூட்டருக்குள் என்ன இருக்கிறது? என்ற கேள்வியைப் பார்த்தவுடன் ஸ்குரூ டிரைவரை எடுத்துக் கொண்டு இறங்கிவிட வேண்டாம். மேலே சொன்ன சாப்ட்வேர் புரோகிராம்களை இறக்கிப் பதிந்து இயக்கிவிட்டு கைகளைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்தாலே போதும்.


                       
 விண்டோஸ் 7 மீடியா பிளேயர்

விண்டோஸ் மீடியா பிளேயர், விண்டோஸ் சிஸ்டத்துடன் நமக்குத் தரப்படும் சாதனமாகும். ஆனால் இதுவரை எக்ஸ்பி சிஸ்டத்தில் நமக்குக் கிடைத்து வந்த விண்டோஸ் மீடியா பிளேய ருக்கும், தற்போது விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் கிடைக்கும் மீடியா பிளேயருக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. இதனால், எக்ஸ்பி யிலிருந்து விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறும் பலர் புதிய அமைப்பினால் தடுமாறுகிறார்கள். அதில் முக்கியமான சில இயக்கங்களை இங்குக் காணலாம்.
விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயங்குபவர்கள், முதலில் விண்டோஸ் மீடியா பிளேயரை இயக்கவும். “recommended settings” என்ற ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின்னர் “Finish” என்பதில் கிளிக் செய்திடவும். இதில் என்ற ஆப்ஷனும் கிடைக்கும். ஆனால் அது இதில் அதிகம் அனுபவப்பட்டவர்களுக்கு மட்டுமே. அடுத்து மியூசிக் பிளேயர் சில சாம்பிள் மியூசிக் பைலுடன் திறக்கப்படும். சிடி வழி பாடல் கேட்க, சிடியை அதன் ட்ரேயில் வைத்திடவும். விண்டோஸ் மியூசிக் பிளேயர் தானாகவே அதில் உள்ள இசை பைலை அடையாளம் கண்டு இசைக்கத் தொடங்கும். பின்னர், கண்ட்ரோல் பட்டன்களுடன் ஒலியின் அளவு, இயக்கும் விதம் ஆகியவற்றைக் கட்டுப் படுத்தலாம்.
அப்போது இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஆல்பம் அல்லது பாடலைக் காண,கீழாக வலது பக்கம் உள்ள ஐகானைக் கிளிக் செய்திட வேண்டும்.
பாடலை இயக்குகையில், சிடியை மியூசிக் பிளேயர் லைப்ரேரியில் கொண்டு செல்ல, வலது பக்கம் உள்ள சிடி அடையாளத்தில் கிளிக் செய்தால் போதும். இதில் சிறப்பு என்னவென்றால், சிடி இயக்கப்படும் போதே இதனை மேற்கொள்ளலாம். இந்த ரிப்பிங் செயல்பாடு முடிந்தவுடன், ஆல்பம் லைப்ரேரியில் பட்டியலிடப்படும்.
சிடியை உருவாக்க (“Burn”) அங்கு தரப்பட்டுள்ள “Burn” டேப்பினைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் விருப்பப்படும் பாடல்களை இழுத்துவிட்டால் போதும்.
  ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் முதன்மைப் பணிகள்
கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? அதன் பணிகள் என்ன என்று நாம் அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை. நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களான, எம்.எஸ். ஆபீஸ், பேஜ்மேக்கர், கோரல் டிரா, ஆட்டோகேட் போன்றவற்றின் பணிகளையே மிகவும் உற்சாகமாகப் பேசுகிறோம். ஆனால் இவற்றிற்கு அடிப்படை யாகவும், இயக்கு வதாகவும் செயல்படுவது ஆப்பரேட்டிங் சிஸ்டமே. இது என்ன என்ன தலையாயப் பணிகளை மேற்கொள்கிறது என்று பார்க்கலாம்.
கம்ப்யூட்டரில் பல பணிகளை நிர்வாகம் (Management) செய்வது ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். அவை
1) உள்ளீடு / வெளியீடு (Input/ Output)
2) நினைவக (Memory) மேலாண்மை
3) பணி (Task) மேலாண்மை
4) பைல் மேலாண்மை
கீபோர்டு, மானிட்டர், பிரின்டர் போன்ற ஹார்ட்வேர் உறுப்புக்களைக் கண் காணித்து அவற்றிடம் வேலை வாங்குவது ஆப்பரேட்டிங் சிஸ்டமே. எடுத்துக்காட்டாக ஒவ்வொரு தடவையும் கீபோர்டில் உள்ள கீகளை நீங்கள் அழுத்தும் பொழுது, ஆப்பரேட்டிங் சிஸ்டம் கண்காணித்து, அந்த கீகள் குறிக்கிற எழுத்துக்களை மானிட்டரில் வெளிப்படுத்துகிறது.
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள நினைவகத்தின் அளவை அறிந்து அதைப் புத்திசாலித்தனமாக ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்திக் கொள்ளும். நினைவகத்தில் தான் தங்குவதற்கான இடம், அப்ளிகேஷன் சாப்ட்வேர்கள் தங்குவதற்கான இடம், நீங்கள் டைப் செய்கிற விவரங்களை இருந்த இடம், டிஸ்க்கிலுள்ள பைலை படிக்கும் பொழுது அதன் விவரங்களை வைக்க வேண்டிய இடம் போன்றவற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டமே தீர்மானிக்கிறது.
பல ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்களை இயக்க முடியும். Multitask என இதை அழைப்பார்கள். இவ்வாறு பல பணிகளில் ஈடுபடும்போது ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் இடையே பிணக்கு எதுவும் ஏற்படாமல், சிக்கலின்றி வழி நடத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் உதவுகிறது. ஒரு குறிப்பிட்ட பணியை இரு சிறு கூறுகளாகப் பிரித்து இரண்டு சிபியுக்களிடம் (CPU) கொடுத்து வேலையை முடிக்கவும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குத் தெரியும்.
நீங்கள் உருவாக்கும் பைல்கள், மற்றும் அப்ளிகேஷன்களுக்கான பைல்கள் போன்றவற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டமே பராமரிக்கிறது. பைலைச் சேமிக்க, அழிக்க, வேறிடத்துக்கு நகர்த்த, பெயர் மாற்றம் செய்ய போன்ற வேலைகளை நீங்கள் மேற்கொள்கையில் ஆப்பரேட்டிங் சிஸ்டமே அவற்றை மேற்கொள்கிறது. பைலைச் சேமிக்கும் பொழுது அதன் நேரம், தேதி ஆகியவற்றைக் குறிக்கிறது. பைலைப் படிக்க/மட்டும் (Read only), மறைக்க (Hidden), சிஸ்டம் என்ற பண்புகளை (Attributes) பைல்களுக்கு நீங்கள் கொடுக்கும் போது அவற்றை மேற்கொள்வதும் ஆப்பரேட்டிங் சிஸ்டமே. படிக்க/மட்டும் என ஒதுக்கிய பைலில் மாற்றம் செய்ய விடாமல் தடுப்பது, அதே பெயரில் வேறொரு பைலைச் சேமிக்க விடாமல் தடுப்பது எல்லாம் ஆப்ப ரேட்டிங் சிஸ்டத்தின் வேலை தான்.
 
வேர்டில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஷார்ட் கட் கீ தொகுப்புCTRL+B: எழுத்துக்களை போல்டாக அமைக்க
CTRL+I : எழுத்துக்களை சாய்வாக அமைக்க
CTRL+U எழுத்துக்களை அடிக்கோடிட்டு அமைக்க
CTRL+DEL: கர்சரின் வலது புறம் உள்ள சொல்லை அழித்திட
CTRL+BACKSPACE: கர்சரின் இடது புறம் உள்ள சொல்லை அழித்திட
CTRL+SHIFT+SPACEBAR: இடையே உடையாத இடைவெளியை உருவாக்க
CTRL+C: தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டை காப்பி செய்திட
CTRL+X: தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டை அழித்திட
CTRL+V: தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டை ஒட்டிட
CTRL+ALT+V: சிறப்பான முறையில் டெக்ஸ்ட் ஒட்டிட
CTRL+SHIFT+< : எழுத்தின் அளவைக் குறைத்திட
CTRL+SHIFT+>: எழுத்தின் அளவை அதிகரிக்க
CTRL+[: எழுத்தின் அளவைக் குறைத்திட
CTRL+]: எழுத்தின் அளவை அதிகரிக்க
CTRL+HYPHEN: இடையே உடையாத ஹைபன் அமைக்க
CTRL+SPACEBAR : பாரா அல்லது கேரக்டர் பார்மட்டிங்கினை நீக்க
CTRL+SHIFT+V:பார்மட்டிங் மட்டும் ஒட்டிட
CTRL+Z: இறுதியாக மேற்கொண்ட செயலை நீக்கிட
CTRL+Y: இறுதியாக அழித்ததனை மீண்டும் கொண்டுவர
CTRL+SHIFT+G: சொல் எண்ணிச் சொல்லும் டயலாக் பாக்ஸைக் கொண்டு வர
CTRL+L: திரையின் இடது புறமாக டெக்ஸ்ட்டை ஒழுங்கு படுத்த
CTRL+E: திரையின் நடுவாக டெக்ஸ்ட்டை ஒழுங்கு படுத்த
CTRL+R: திரையின் வலது புறமாக டெக்ஸ்ட்டை ஒழுங்கு படுத்த
CTRL+M: பாரா அல்லது தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டினை மார்ஜினில் அமைக்க
CTRL +1: வரிகளுக்கு இடையே ஸ்பேஸ் ஒரு வரியாக அமைக்க
CTRL +5: வரிகளுக்கு இடையே ஸ்பேஸ் ஒன்றரை வரியாக அமைக்க
CTRL +2: வரிகளுக்கு இடையே ஸ்பேஸ் இரு வரிகளாக அமைக்க
F7: : ஸ்பெல்லிங் மற்றும் இலக்கண தவறுகளைச் செக் செய்து தர
SHIFT+F7: தெசாரஸ் என்னும் ஒரு சொல் போன்ற பொருள் தரும் பிற சொல் தரும் தெசாரஸ் பயன்பாட்டைப் பெற
CTRL+SPACE: ஆட்டோ கரெக்ட் பெறவும் மூடவும்



 தமிழ் டெக்ஸ்ட்டைப் படிக்க கம்யூட்டர்

தமிழில் சிறிய வாக்கியங்களை அமைத் தால், அதனைப் படித்துக் காட்டும் பயன்பாட்டு தளம் ஒன்றை, பெங்களூரு வில் இயங்கும் இந்திய பொறியியல் கழகத்தின் மொழி ஆய்வுத் துறையினர் உருவாக்கியுள்ளனர். இதனைச் சோதனை செய்திட http://mile.ee.iisc.ernet.in/tts என்ற தளம் செல்லவும். அங்கு காட்டப்பட்டுள்ள கட்டத்தில், தமிழ் யூனிகோட் எழுத்துக்களில், சிறிய வரிகளை டைப் செய்து என்டர் தட்டவும். அடுத்து, இன்னொரு தளத்திற்கு நீங்கள் எடுத்துச் செல்லப் படுவீர்கள். அங்கு உள்ள லிங்க்கில் கிளிக் செய்தால், நீங்க டைப் செய்த டெக்ஸ்ட்டைப் படித்துக் காட்டக் கூடிய சவுண்ட் பைல் கிடைக்கும். அதனைக் கிளிக் செய்தால், டெக்ஸ்ட் படித்துக் காட்டப்படும். இதில் ஒரு சில சொற்களில் மட்டுமே தவறான ஒலி கிடைக்கிறது. பெரிய வாக்கியங்களாக இல்லாமல், சிறிய வாக்கியங்கள் மிக அழகாக படிக்கப்படுகின்றன.
இந்த துறையில் இது குறித்த ஆய்வு தொடர்ந்து நடைபெறுவதால், மேலும் பல வசதிகளைச் சிறப்பாகத் தரும் அப்ளிகேஷன்களை வருங்காலத்தில் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
பார்வைத் திறன் குறைந்தவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.
 டவுண்லோட் இன்டர்நெட் பயன்பாட்டினைக் கணக்கிட 
 பிராட் பேண்ட் இன்டர்நெட் இணைப்பு இப்போது பலரிடம் வெகுவேகமாகப் பரவி வரும் பழக்க இணைப்பாக உள்ளது. இதனை வழங்கும் சேவை நிறுவனங்கள், இறக்கப்படும், ஏற்றப்படும் டேட்டா அடிப்படையில், குறிப்பிட்ட அளவு ஜிபி வரை ஒரு கட்டணம் என்றும் அதன் பின்னர், ஒவ்வொரு எம்பி டேட்டாவிற்கும் தனியாகக் கட்டணம் வாங்குகின்றனர். சில நிறுவனங்களின் திட்டங்களில் நமக்கு எப்படி இந்த அளவினை மேற்கொள்கிறார்கள் என்று காட்டப்படுவது இல்லை. இதனால், இணைய இணைப்பினைப் பயன் படுத்தினால், ஒரு மணிக்கு இவ்வளவு என, அந்த பயன்பாட்டு நேரத்திற்குமான கட்டணத்தினை மட்டும் செலுத்தும் திட்டத்தினைப் பலர் விரும்புகின்றனர். ஆனால் மணிக்கணக்கினாலான திட்டத்தினை சில நிறுவனங்கள் மட்டுமே அளித்து வருகின்றன.
எது எப்படி இருந்தாலும் நம் இணைய பயன்பாட்டினை நாம் அளந்து பார்த்து அறிய முடியாதா என்ற கேள்விக்கு விடையாகச் சில புரோகிராம்கள் இணையத்தில் உள்ளன. அவற்றில் ஒன்று BitMeter OS ஆகும். இதனை http://codebox. org.uk/bitmeterOs என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இது ஓர் ஓப்பன் சோர்ஸ் புரோகிராம். விண்டோஸ், லினக்ஸ் மற்றும் மேக் ஓ.எஸ். ஆகிய சிஸ்டங்களில் இயங்கும் வகைகளில் கிடைக்கிறது. இலவசமாய் இணையத்தில் கிடைக்கிறது.
இதனைத் தரவிறக்கம் செய்த பின்னர், ஸிப் பைலை விரித்து, பைல்களை ஒரு போல்டரில் வைத்துக் கொள்ளவும். பின்னர் அப்ளிகேஷன் பைலை இயக்கி, இந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடவும். இன்ஸ்டால் செய்தவுடன், நமக்கு அது குறித்து ஒரு செய்தி கிடைக்கும். இதன் பின்னர், நாம் அறியாமலேயே இந்த புரோகிராம், கம்ப்யூட்டரின் பின்னணியில் இயங்கும். நீங்கள் எவ்வளவு டேட்டா அப்லோட் மற்றும் டவுண்லோட் செய்கிறீர்கள் என்ற கணக்கை எடுத்துக் கொண்டிருக்கும். இந்த டேட்டா எங்கிருந்து வந்தது என்ற தகவல் எதனையும் இந்த புரோகிராம் எடுத்துக் கொள்ளாது. எந்த நேரத்திலும், நீங்கள் இதனை இயக்கி, இதன் இணைய தளம் சென்று, உங்கள் இணையப் பயன் பாடு குறித்த தகவல்களைக் காணலாம். http://localhost:2605/ என்ற முகவரியில் உள்ள தளம் சென்று இந்த தகவல்களைக் காணலாம். இங்கு கிடைக்கும் இன்டர்பேஸில் காட்டப்படும் மானிட்டரில், அப்லோட் மற்றும் டவுண்லோட் வேகம், கிராபிகல் மற்றும் டிஜிட்டல் வடிவில் கிடைக்கின்றன. கீழாக வலது புறம் உள்ள கடிகாரத்தில் stopwatch பயன்பாட்டினை மேற்கொள்ளலாம். இதன் மூலம் குறிப்பிட்ட கால அளவில் எவ்வளவு டேட்டா பயன்படுத்தப்பட்டது என அறியலாம். History டேப்பில் கிளிக் செய்தால் நீங்கள் பயன் படுத்திய அளவினை மணி, நிமிடம், நொடி முதல் அறியலாம். டவுண்லோட் மற்றும் அப்லோட் பார் கிராப் மூலம் காட்டப்படுகிறது. Summary டேப் ஒரு மாதத்தில் நீங்கள் மேற் கொண்ட மொத்த இணைய அளவினைக் காட்டுகிறது. என்ற Query டேப்பின் மூலம், குறிப்பிட்ட கால அளவிலான டேட்டா எவ்வளவு என்று காணலாம்.
மேலே குறிப்பிட்ட அனைத்து வசதிகளைக் காட்டிலும் ஒரு சிறப்பான வசதி Alerts என்ற டேப்பில் தரப்பட்டுள்ளது. இதில் பல அளவுகளை நாம் வரையறை செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட டேட்டா டவுண்லோட் அல்லது அப்லோட் மேற்கொள்ளப்பட்டவுடன் நம்மை எச்சரிக்கும்படி செட் செய்திடலாம். ஒரு மாதத்தில் பயன்பாடு இவ்வளவு தான் இருக்க வேண்டும் என வரையறை செய்தால், அதற்கேற்ற வகையில் நாம் பயன்பாட்டினைக் காட்டும்.
Calculator என்ற டேப் மூலம் நாம் தரவிறக்கம் செய்திடும் பைல் இன்னும் எவ்வளவு நேரத்தில் முழுமையாக கம்ப்யூட்டரில் இறங்கும் என அறிந்து கொள்ளலாம்.
பிராட்பேண்ட் பயன்படுத்தும் அனை வரும் கட்டாயம் இன்ஸ்டால் செய்திட வேண்டிய புரோகிராம் இது.



டூப்ளிகேட் பைல்களை நீக்க


 கம்ப்யூட்டரில் பைல்களை உருவாக்குகிறோம்; இணையத்திலிருந்து தரவிறக்கம் செய் கிறோம்; மற்றவர்களிடமிருந்து பெறுகிறோம். இவை அனைத்தையும் பயன்படுத்துகையில், பல்வேறு காரணங்களுக்காக அவற்றின் நகல்களை வெவ்வேறு ட்ரைவ்களில், டைரக்டரிகளில், போல்டர்களில் பதிந்து வைக்கிறோம். சில பைல்களை, அவற்றின் பெயர்களை மட்டும் மாற்றி, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிந்து வைக்கிறோம். இதனால், ஒரு பைல் பலமுறை காப்பி எடுக்கப்பட்டு, நம் கம்ப்யூட்டரில் தங்குகிறது. காலப்போக்கில், இந்த நகல்களால் ஹார்ட் டிஸ்க்கின் இடம் வீணாகிறது. தேவையற்ற முறையில் இடம் பெற்றுள்ள பைல்கள் எவை என்ற தகவலையும், அவை எங்குள்ளன என்ற விவரத்தினையும் நாம் மறந்துவிடுகிறோம். இதனால், ஒரு கட்டத்தில் இவற்றைக் கண்டறிந்து நீக்குவது நம்மால் இயலாத செயல் ஆகிவிடுகிறது.
இது போல ஒன்றுக்கு மேற்பட்ட நகல்களாகத் தங்கும் பைல்களை இனம் மற்றும் இடம் காட்ட, இணையத்தில் பல இலவச புரோகிராம்கள் கிடைக்கின்றன. இவற்றை இங்கு காணலாம்.

1. டூப்ளிகேட் கிளீனர் (Duplicate Cleaner): இந்த புரோகிராம் MD5 Hash algorithm என்ற தொழில் நுட்ப வழிமுறையினைக் கையாள் கிறது. ஒரே பைல் வேறு பெயர்களில் இருந்தாலும், இந்த புரோகிராம் கண்டறிகிறது. எனவே ஒரே மாதிரியான டேட்டா உள்ள பைல்களை, அவை எந்த பெயரில் இருந்தாலும் கண்டறிந்து காட்டுகிறது. கம்ப்யூட்டர் முழுவதும் அலசி ஆராய்ந்து, பார்மட், அளவு மற்றும் உருவாக்கப்பட்ட நாள் ஆகியவற்றின் அடிப்படையில் பட்டியலிட்டுக் காட்டுகிறது. ஒரே பாடலை MP3, WMA, M4A, M4P, OGG, APE மற்றும் FLAC என வெவ்வேறு பார்மட்களில் இருந்தாலும், அவற்றை அடையாளம் காட்டுகிறது.
எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உருவாக்கப்படும் பைல்கள், ஆடியோ மற்றும் வீடியோ பைல்கள், போட்டோக்கள், டெக்ஸ்ட் பைல்கள் என அனைத்தையும் ஸ்கேன் செய்து காட்டுகிறது.
அதே நேரத்தில் விண்டோஸ் மற்றும் சிஸ்டம் சார்ந்த அனைத்து பைல்களையும் இது தொடுவதில்லை. அவற்றை அப்படியே காட்டுவதுடன் விட்டுவிடுகிறது. இந்த புரோகிராமுடன் எந்தவிதமான அட்வேர் அல்லது ஸ்பைவேர் இணைந்து வருவதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக இது முழுமையாக இலவசமாகக் கிடைக்கிறது. இதனைப் பெற http://www.digitalvolcano. co.uk/content/duplicatecleaner என்ற முகவரியில் உள்ள இணையதளம் செல்லவும்.

2. டூப் டிடக்டர் (DupDetector): இந்த புரோகிராம் இமேஜ் பைல்களை மட்டும் அவை ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இருந்தால் கண்டறிகிறது. அடிக்கடி போட்டோ எடுத்து கம்ப்யூட்டரில் வெவ்வேறு பெயர்களில் பதிந்து வைப்பவர்கள், அவற்றைக் கண்டறிந்து நீக்க இதனைப் பயன்படுத்தலாம். jpg, gif, bmp, png, tif, pcx, tga, wmf, emf, psp என பத்து வகையான பைல் பார்மட்களை இது கையாள்கிறது. இதனுடனும் எந்த விதமான மால்வேர் புரோகிராம்கள் வருவதில்லை. இதனையும் இலவசமாக இணையத்திலிருந்து பெறலாம். இதனைப் பெற http://www.prismaticsoftware.com/dupdetector/dupdetector.html என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.

3. அஸ்லாஜிக்ஸ் டூப்ளிகேட் பைல் பைண்டர் (Auslogics Duplicate File Finder): டாகுமெண்ட்கள், படங்கள் மற்றும் பிற அனைத்து பைல்களின் டூப்ளிகேட் நகல்களைக் கண்டறிகிறது. பெயர்களில் மட்டுமின்றி, ஒரே டேட்டாவுடனும் உள்ள பைல்களைக் காட்டுகிறது. இலவசமாகக் கிடைக்கும் இந்த புரோகிராமினைப் பெற http://www.auslogics. com/en/software/duplicatefilefinder/ என்ற முகவரியில் உள்ள தளத்தினை அணுகவும்.

4. டபுள் கில்லர் (DoubleKiller): டூப்ளிகேட் பைல்களைக் கண்டறியும் புரோகிராம் களில் வேகமாகச் செயல்படும் புரோகிராம் இது. ஒரே கம்ப்யூட்டரில் மட்டுமின்றி, நெட்வொர்க் கம்ப்யூட்டர்களிலும் இது டூப்ளிகேட் பைல்களை ஸ்கேன் செய்கிறது. பெயர், அளவு, உருவாக்கப்பட்ட நாள் வாரியாக டூப்ளிகேட் பைல்களைப் பட்டிய லிட்டுக் காட்டுகிறது. எத்தகைய பைல் களைத் தேட வேண்டாம் என பைலின் துணைப் பெயர் (*.mp3 or *.dll) கொடுத்து வரையறை செய்திடலாம். இதனை http://www.bigbangenterprises.de/en/doublekiller/ என்ற முகவரியில் உள்ள இணைய தளப் பக்கத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

5. ஈஸி டூப்ளிகேட் பைல் பைண்டர் (Easy Duplicate Finder): இந்த வகை புரோகிராம்களில் மிக வேகமாகவும், துல்லிதமாகவும் செயல்படும் புரோகிராம் இது. வேகமாகச் செயல்பட்டு, கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து டூப்ளிகேட் பைல்களையும், நாம் புரிந்து கொள்ளும் வகையில் பட்டியலிட்டு டெக்ஸ்ட் பைலாகக் காட்டுகிறது. பின்னர் அவற்றை என்ன செய்வது என்பதற்கான வழிகளையும் காட்டுகிறது. இந்த இலவச புரோகிராமினைப் பெற http://www.easyduplicatefinder.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.

6. பாஸ்ட் டூப்ளிகேட் பைல் பைண்டர் (Fast Duplicate File Finder): பைலின் பெயர், அளவு, நாள் மட்டுமின்றி அவற்றில் உள்ள டேட்டாவின் அடிப்படையில் டூப்ளிகேட் பைல்களை மிக வேகமாக ஸ்கேன் செய்து, டூப்ளிகேட் பைல்களின் பட்டியலைத் தருகிறது. Binary comparison algorithm என்னும் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்துகிறது. பட்டியலிட்டு, முந்தைய நாளிட்ட பைல் களை அழிக்கலாமே என்று சுட்டிக் காட்டுகிறது. சிஸ்டம் பைல்களையும் போல்டர்களையும் இந்த தேடலில் இருந்து நீக்கி வைக்க ஆப்ஷன் தருகிறது. யு.எஸ்.பி. ட்ரைவ் மற்றும் பிற ஸ்டோரிங் மீடியாவில் உள்ள டூப்ளிகேட் பைல்களையும் கண்டறிகிறது. இதனைப் பெற http://www.mindgems.com/products/FastDuplicateFileFinder/ என்ற முகவரி யில் உள்ள தளத்தை அணுகவும்.

7. ஆல் டூப் (Alldub): டெக்ஸ்ட், மியூசிக், மூவி என அனைத்து வகையிலும் டூப்ளிகேட் பைல்களைக் கண்டறிகிறது. பைல் முதன்மை பெயர், துணைப் பெயர், பைல் அளவு, பைல் டேட்டா, இறுதியாக பைலைத் திருத்திய நாள், பைல் உருவான நாள் என பலவகை பைல் அம்சங்களின் அடிப்படையில் இது தன் தேடலை மேற்கொண்டு டூப்ளிகேட் பைல்களைக் கண்டறிந்து பட்டிய லிடுகிறது. சிடி, டிவிடி, நெட்வொர்க் டிஸ்க் ஆகிய வற்றிலும் தேடலை மேற்கொள்கிறது. இதனைப் பெற http://www.alldup.de/en_ alldup.htm என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.


 மால்வேர் பாதிப்பை நீக்கும் வழிகள்

உங்களுடைய கம்ப்யூட்டரை கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்கள் பாதித்து விட்டனவா? அதற்கான அறிகுறிகள் தெரிகின்றனவா? வழக்கத்திற்கு மாறாக, கம்ப்யூட்டர் மெதுவாக இயங்குகிறதா? நிறைய பாப் அப் பெட்டிகள் கிடைக்கின்றனவா? புதுப்புது பிரச்னைகள் தலை தூக்குகின்றனவா? அப்படியானால், உங்கள் கம்ப்யூட்டரை வைரஸ், ஸ்பைவேர் அல்லது வேறு ஏதேனும் மால்வேர் புரோகிராம்கள் பாதித்திருக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த பிரச்னைகள், ஹார்ட்வேரில் பிரச்னைகள் ஏற்பட்டாலும் தென்படலாம்; இருப்பினும் மால்வேர் இருக்கின்றனவா என்று சோதனை செய்து உறுதி செய்து கொள்வது நல்லது.

1. சேப் மோட்
: உங்களுடைய கம்ப்யூட்டரை இன்டர்நெட் இணைப்பி லிருந்து நீக்கவும். கம்ப்யூட்டரை சுத்தப் படுத்த நீங்கள் தயாராகும்வரை இன்டர்நெட் இணைப்பினைத் தர வேண்டாம். இதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள மால்வேர், பரவுவதையும், உங்கள் தனிப்பட்ட தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்புவதனையும் தடுக்கலாம். உங்களுடைய கம்ப்யூட்டரில் மால்வேர் இருப்பதாக உணர்ந்தால், சேப் மோடில் (Safe Mode) பூட் செய்திடவும். இதற்கு கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்து, பின்னர் எப்8 கீயின் இடம் அறியவும். பின்னர், பெர்சனல் கம்ப்யூட்டரை இயக்கி, திரையில் ஏதேனும் தென்பட்டவுடன், எப்8 கீயினைத் தட்டிக் கொண்டே இருக்கவும். இதனால், Advanced Boot Options என்ற மெனு கிடைக்கும். அதில் Safe Mode with Networking என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து என்டர் தட்டவும். சேப் மோடில் உங்கள் கம்ப்யூட்டர் இதற்கு முன் இருந்ததைக் காட்டிலும் சற்று வேகமாக இயங்கு வதனைக் காணலாம். அவ்வாறு இயங்கி னால், மால்வேர் நிச்சயம் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ளது.

2. தற்காலிக பைல் நீக்கம்: சேப் மோடில் இருந்தபடி, வைரஸ் ஸ்கேன் செய் திட நீங்கள் விரும்பலாம். அதற்கு முன்னர், தற்காலிக பைல்களை நீக்கவும். இதனால், டிஸ்க் இடம் சற்று கூடுதலாகக் கிடைக்கும்; வைரஸ் ஸ்கேனிங் வேகமாக நடைபெறும். விண்டோஸ் இயக்கத்துடன் வரும் Disk Cleanup utility என்பதைப் பயன்படுத்த, Start, All Programs (or just Programs), Accessories, System Tools, Disk Cleanu எனச் செல்லவும்.

3. மால்வேர் ஸ்கேனர் தரவிறக்கம்: ஏற்கனவே உங்கள் கம்ப்யூட்டரில் செட் செய்து வைத்திருந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராமிற்குப் பதிலாக, வேறொரு மால்வேர் ஸ்கேனிங் அல்லது எதிர்ப்பு புரோகிராமினை இயக்கவும். இதற்காக, இணையத்திலிருந்தும் இறக்கிக் கொள்ளலாம். லட்சக் கணக்கில் மால்வேர் புரோகிராம்கள் மற்றும் வைரஸ்கள் இருப்பதால், எந்த ஒரு ஆண்ட்டி வைரஸ் மற்றும் மால்வேர் எதிர்ப்பு புரோகிராம்கள் அவை அனைத்தையும் நீக்கும் என எண்ண வேண்டாம். நாம் எப்போது நாமாக இயக்குகிறோமோ, அப்போது இயங்கத் தொடங்கி, மால்வேர்களை அழிக்கும் புரோகிராம்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்றை தரவிறக்கம் செய்து பயன் படுத்தவும். அதனை அடுத்து, கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினைப் பயன்படுத்தலாம். கீழ்க்காணும் புரோகிராம்கள் இந்த வகையில் அதிகப் பயனுள்ளவை. ஆBitDefender Free Edition, Kaspersky Virus Removal Tool, Malwarebytes, Norman Malware Cleaner, மற்றும் Super Anti Spyware.

4. மால்வேர் பைட்ஸுடன் (Malwarebytes) ஸ்கேன்: இந்தவகையில் மிகச் சிறந்த Malwarebytes புரோகிராமினை இயக்குவது நல்லது. உங்களிடம் இந்த புரோகிராம் இல்லை என்றால், http://www.malwarebytes. org/ என்ற இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்த பின்னர், இணைய இணைப்பினை நிறுத்திவிட்டு, ஸ்கேன் செய்திடலாம். உங்கள் கம்ப்யூட்டரில் இதனை தரவிறக்கம் செய்திட முடியாத போது, மற்றொரு கம்ப்யூட்டரின் இணைய இணைப்பில் பெற்று, இதில் இன்ஸ்டால் செய்திடலாம்.
மால்வேர் பைட்ஸ் ஸ்கேன் செய்திடுகையில் ‘Perform quick scan’ என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து இயக்கவும். அதிக பட்சம் 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை இந்த ஸ்கேன் பணி செயல்படுத்தப்படும். இந்த பணி நடைபெறுகையில், இந்த ஸ்கேனர் மறைந்து பின்னர் அதனை மீண்டும் பெற இயலவில்லை என்றால், உங்கள் கம்ப்யூட்டரில் ரூட்கிட் என்ற வைரஸ் அல்லது அதனைப் போன்று செயல்படும் வைரஸ் உள்ளது என்பது உறுதி. ஏனென்றால், இந்த வகை வைரஸ்கள், எந்த ஸ்கேனரையும் இயங்கவிடாமல், அவற்றையும் முடக்கி விடும் தன்மை கொண்டன. அப்படிப்பட்ட வைரஸ் இருந்தால், உங்கள் பைல்கள் அனைத்தையும் பேக் அப் செய்த பின்னர், விண்டோஸ் இயக்கத்தை மீண்டும் ரீ இன்ஸ்டால் செய்வதே சிறந்த வழியாகும்.
மால்வேர் பைட்ஸ் வெற்றிகரமாக இயங்கி முடித்த பின்னர், பைல்களின் நிலை குறித்த அறிக்கை ஒன்று டெக்ஸ்ட் பைலாகக் கிடைக்கும். சந்தேகப்படும் படியான பைல்களையும், பாதிக்கப்பட்ட பைல்களையும் பட்டியலிட்டுக் காட்டும். இவற்றை நீக்கவா என்ற கேள்வியும் கேட்கப்படும். இவற்றை நீக்குவதே நல்லது. இவை நீக்கப்பட்டவுடன் மால்வேர் பைட்ஸ் உங்கள் கம்ப்யூட்டரை மீண்டும் இயக்குமாறு கேட்கும். ஓகே கிளிக் செய்து இயக்கவும். மால்வேர் புரோகிராம்கள் நீக்கப்பட்டு, கம்ப்யூட்டர் மறுபடியும் இயங்கத் தொடங்கியவுடன், வழக்கமான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் மூலம், கம்ப்யூட்டரின் அனைத்து ட்ரைவ்களையும் சோதனை செய்திடவும்.

5. பிரவுசரை சரி செய்க: மால்வேர் தொகுப்புகள், விண்டோஸ் சிஸ்டம் பைல்களைக் கெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அத்துடன் நம் பிரவுசரில் மாற்றங்களை ஏற்படுத்தி, தொடர்ந்து கம்ப்யூட்டரில் இத்தகைய மால்வேர் புரோகிராம்கள் நுழைந்திட வழி வகுக்கின்றன. எனவே அடுத்த இணைய இணைப்புக்கு முன்னர், பிரவுசரின் அனைத்து செட்டிங்கு களையும் ஒருமுறை சோதனை செய்து பார்த்துவிடுவது நல்லது.

6. சிஸ்டம் பைல் சரி செய்தல்: ஒன்றும் செயல்படுத்த முடியாமல் போய், விண்டோஸ் இயக்க பைல்களை மீண்டும் பதிப்பதுதான் ஒரே வழி என்றால், அனைத்து பைல்கள், ட்ரைவர்களை பேக் அப் எடுக்க வேண்டும். இதற்கு Double Driver என்ற புரோகிராம் உதவும். உங்களிடம் ட்ரைவர் டிஸ்க்குகள் இல்லை என்றாலும், இந்த புரோகிராம் உங்களுக்கு உதவிடும்.

7. கம்ப்யூட்டரை "சுத்தமாக' வைத்திடுக: கம்ப்யூட்டரில் எப்போதும் அப்டேட் செய்யப்பட்ட ஆண்ட்டி வைரஸ் புரோ கிராம் செயல்பாட்டில் இருக்க வேண்டும். கட்டணம் செலுத்தி இதனை வாங்கி ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க இயலாவிட்டால், இலவசமாகக் கிடைக்கும் Avast, AVG, Comodo, மற்றும் Microsoft Security Essentials போன்ற தொகுப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.
வழக்கமான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களுடன் OpenDNS போன்ற புரோகிராம் களைப் பயன்படுத்துவதும், மால்வேர் புரோகிராம்களிடமிருந்து கம்ப்யூட்டரைக் காப்பாற்றும். நம் பணிகளுக்கு என்றும் கம்ப்யூட்டரையே நம்பி இருப்பதால், நம் முக்கிய ஆவணங்களை அதில் மட்டுமே பல வேளைகளில் பதிந்து வைத்திருப்ப தால், கம்ப்யூட்டரை வெளித் தாக்குதல் களில் இருந்து காப்பாற்றுவது நல்லது.

Saturday, November 26, 2011

                                                                                
                                                                                               


Garbage collectors in space



Space Debris Every messy kid gets told to clean up his or her room. City governments send out trucks and crews to clean up roads and parks. Now, scientists say if we want to keep our astronauts and satellites safe, it’s time to clean up space, and soon.
A sprawling garbage heap floats high above Earth. It contains fragments of broken-down satellites and pieces of used rockets, as well as a few unusual objects like gloves and cameras accidentally dropped by astronauts. The problem isn’t going away; it’s getting worse. The number of pieces of space garbage gets larger every year. Around the world, space agencies worry about the trash because even small bits of litter — no larger than the fingernail on your pinkie — can cause serious damage to satellites or spacecraft.
In a recent study, engineer Hugh Lewis and his colleagues from the University of Southampton in England ran some calculations on space junk. In August, they reported that the growth of space junk could slow down if every year about 10 large pieces were removed. (The largest piece of space junk is about the size of a refrigerator.)
If a broken or defunct satellite doesn’t fall back toward Earth and burn up in the atmosphere, it continues to whiz around our planet. It may crash into another satellite or used rocket and break into smaller pieces. These pieces are called orbital debris.
In February 2009, a Russian satellite and a U.S. satellite plowed into each other over northern Siberia. The collision resulted in more than 2,000 new pieces of space junk that continue to orbit Earth. NASA’s Orbital Debris Program Office tracks the larger of these pieces to make sure they don’t smash into other satellites.
In March of this year, scientists saw that the International Space Station was headed toward a four-inch piece of space garbage left over from the 2009 collision. They sounded the alarm, and in April the space station changed its course to avoid the debris. This was the fifth time in less than three years that the station has changed its course to stay safe from floating debris.
Space Debris2
Not all space junk stays in space. In January 2001, this heavy chunk of a Delta 2 rocket fell to earth about 240 kilometers (150 miles) from Saudi Arabia’s capital, Riyadh. Credit: NASA Orbital Debris Program Office
Another situation, related to greenhouse gas emissions, is lengthening how long any piece of space trash remains in orbit.
As things in orbit push through Earth’s atmosphere, they slow down. This braking action, called friction, not only lowers the orbit of space junk but also increases the chance it will burn up as it slows down. Friction is currently the only thing that removes space junk from orbit. But as more emissions of carbon dioxide, a greenhouse gas, rise into the upper atmosphere, this gas cools off a layer called the thermosphere. As a result, the thermosphere is becoming less dense. (Density is the amount of matter packed into a particular volume, and materials with more density are thicker. Maple syrup, for example, is denser than water.) The drop in density means there’s less friction on space junk, allowing the trash to orbit longer. And this increases its opportunity to hit something.
The recommendation by Lewis and his team to send up space-garbage collectors is easier said than done. Scientists can’t remove 10 pieces a year because “we don’t know how to clean up even one,” Nicholas Johnson told Science News. Johnson is the scientist in charge of NASA’s Orbital Debris Program Office, which keeps track of large pieces of debris and helps spacecraft and satellites avoid dangerous situations. He said that even though a space cleanup is “desirable,” it’s not going to happen in the next few years. “There’s nothing on the horizon” for a space trash pickup program, he said.
Right now, the risk of a serious collision is low. Since people began sending rockets into space, Johnson said only two operational satellites have ever been damaged. He said it’s possible that a dangerous or deadly collision could occur, but the chance of that happening is small.
For now, Johnson told Science News, his team’s near-term priority is tracking smallish pieces of space debris. There are more of them, they’re harder to see from Earth and they’re more likely to cause trouble.
“If we’re going to lose spacecraft in the next two decades,” Johnson said, “we’re [probably] going to lose them to small things we [currently] can’t track.”

POWER WORDS (adapted from the New Oxford American Dictionary and NASA.gov)
atmosphere The envelope of gases surrounding Earth or another planet.
debris Scattered fragments, typically of something wrecked or destroyed. Space debris includes the wreckage of defunct satellites and spacecraft.
density A measure of the consistency of an object, found by dividing the mass by the volume.
friction The resistance to movement that occurs when two things — solids, gases, liquids or a combination of two of these — are in contact. Friction generally causes a heating, which can damage the surface of the materials rubbing against one another.
orbit The curved path of an object or spacecraft around a star, planet or moon.
thermosphere An upper region of the atmosphere that extends to nearly 400 miles above Earth’s surface. In the thermosphere, temperature increases with height because of the sun’s energy.

Double sunsets on a distant world

                                                                              ,

Thursday, November 10, 2011

வெளிநாட்டில் பயில ஆலோசகரை நாடுகிறீர்களா?-


    வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் பயில பலருக்கும் ஆசை  இருக்கிறது. அது தொடர்பான விவரங்களைக் கல்வி ஆலோசகர்கள் பலர் வழங்குகின்றனர். ஆலோசனை பெறுவதில் பிரச்னை எதுவுமில்லைதான். சரியான நபரிடம் ஆலோசனை பெறுகிறோமா என்பதில்தான் சிக்கல் இருக்கிறது. இந்திய மாணவர் ஒருவருக்கு ஆஸ்திரேலிய கல்வி நிறுவனம் ஒன்றில் இடம் கிடைத்தது. ஆறு மாதங்களுக்குப் பிறகே, தனக்கு அத்துறையில் விருப்பமில்லை என்பது அம்மாணவருக்குத் தெரிய வந்தது. இதற்குக் காரணம் தவறான ஆலோசகரிடம் சென்று, அவர் மூலம் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சேர்ந்தது தான்.
சுய திட்டமிடல் அவசியம்
ஓர் ஆலோசகரை நாடுமுன், சுயதிட்டமிடல் அவசியம். எந்த பாடத்திட்டம், எந்தத்துறை உங்களுக்கு விருப்பமானது என முடிவு செய்யுங்கள். அந்தத்துறையைத் தேர்ந்தெடுத்ததற்கான அவசியம், காரணத்தை உணருங்கள். எந்தக் கல்லூரி, பல்கலைக்கழகத்தில் பயில விருப்பம். அவ்வாறு தேர்வு செய்த கல்லூரியில் சேர்வதன் மூலம் கிடைக்கும் கூடுதல் பயன்கள் என்ன? வெளிநாட்டில் படிப்பதன் மூலம் அடைய விரும்பும் இலக்கு என்ன? அந்நாட்டில் எந்நகரத்தில் தங்கிப் பயில விரும்புகிறீர்கள்? படிப்பதற்கான நிதிஆதாரம் எப்படி இருக்கிறது என்ற கேள்விகளை கேட்டுக் கொள்ளுங்கள். இந்த அடிப்படையான கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இல்லாமல் ஓர் ஆலோசகரை நாடினால், நீங்கள் தவறான துவக்கத்தில் இருக்கிறீர்கள்.
பெரும்பாலான மாணவர்கள் எல்லாமே ஆயத்தமாக கிடைக்க வேண்டும் என, விரும்புகின்றனர். சுய திட்டமிடலுக்கு நிகரானது வேறெதுவும் இல்லை. ‘பிறரின் அனுசரணையில் வளர்ச்சி பெறும் மனோபாவத்தை இந்திய மாணவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்’ என்பதே பிரிட்டிஷ் கவுன்சில் டெல்லி கிளை மேலாளர் முனிஷ் குப்தாவின் கருத்து.
தேர்ந்தெடுக்கப் போகும் துறை பற்றிய தீர்க்கமான முடிவு இருந்தால், அத்துறையில் நீங்கள் செறிவான உயர்கல்வியைப் பெற முடியும். மூன்றாம் நபரின் ஆலோசனை தேவையில்லை. ஆனால், ஆலோசகர் ஒருவரின் உதவியை நாடுவதாக இருந்தால், அவர்களின் சேவையை மட்டும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்; முழுமையாக அவர்களை சார்ந்து இராதீர்கள்.
தெளிவான அணுகுமுறையோடு ஆலோசகரைச் சந்தித்தால், நீங்கள் விரும்பும் துறை ஏற்கனவே முடிவு செய்திருக்கும் கல்வி நிறுவனம் தவிர வேறு நிறுவனங்களால் வழங்கப்படுகிறதா? அங்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகைகள் என்ன? என்பன போன்ற இதர தகவல்களையும் அவர்களிடம் கேளுங்கள். தேவைகள் பற்றித் தெளிவாக அறிந்து கொண்டிருக்கும் மாணவர்களே, தங்களை சரியான இடத்துக்கு இட்டுச் செல்லும் ஆலோசகர்களைக் கண்டுகொள்ள முடியும்.  இல்லாவிட்டால், அந்த முகவருக்கு நீங்கள் பணங்காய்ச்சி மரம் மட்டுமே.
நேர்மையான ஆலோசகரைக் கண்டு கொள்ளும் விதம்
நேர்மையான ஆலோசகர் முதலில் உங்களின் விருப்பத்துறை பற்றி அறிந்து கொள்வார். பின்னர், மதிப்பெண்கள் அல்லது தரம் பற்றி ஆய்வு செய்வார். எந்தத்துறையில் புரிந்து கொள்ளும் திறனும், விருப்பமும் இருக்கிறது என்பதுடன், உங்களின் நிதிப் பின்புலத்தையும் பரிசீலிப்பார். அத்துறை சார்ந்த பல பாடத்திட்டங்கள் பற்றி விவாதிப்பார். அவர் உங்களை சுயமாக சில விவரங்கள் சேகரிக்கவும், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்துடன் நேரடித் தொடர்பு வைத்துக் கொள்ளவும் உங்களை ஊக்குவிப்பார். உங்களுக்கு பயோ இன்ஜினியரிங் துறை பொருத்தமாக இருக்கும் பட்சத்தில், ஒருபோதும் எம்.பி.ஏ., படிக்க ஆலோசனை சொல்லமாட்டார்.
பரிந்துரை செய்வாரே தவிர, குறிப்பிட்ட கல்லூரியில் சேரும் படி வர்த்தகம் பேசமாட்டார். அக்கல்லூரியைப் பற்றி விளம்பரம் செய்ய மாட்டார்.
தவறான ஆலோசகர்களை இனம்காணல்
இந்நபர்கள் முதலில் உங்களின் மதிப்பெண்ணைச் சரிபார்ப்பர். பின் தங்களிடம் இருக்கும் கல்லூரிகள் பட்டியலில் இருந்து சிலவற்றைப் பரிந்துரைப்பர். சிலர், குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களின் முகவர்களாகவே செயல்படுவர். அதிக கல்விக்கட்டணம் செலுத்த வேண்டிய பாடங்களாக பரிந்துரைப்பர். ஏனெனில் அவர்களுக்கு அதன் மூலம் கமிஷன் கிடைக்கும். சில கல்வி நிறுவனங்கள் கல்விக்கட்டணத்தில் இருந்து ஐந்து முதல் ஏழு சதவீதம் வரை முகவர்களுக்குக் கமிஷன் தருகின்றன.
சிலர் 3,000 அமெரிக்க டாலர்களை கமிஷனாகப் பெறுகின்றனர். குறைவான கல்விக்கட்டணம் உள்ள கல்லூரிகளை அவர்கள் பரிந்துரைக்கவே மாட்டார்கள். அவர்களுக்கு அது ஒரு வியாபாரம் அவ்வளவே. அவர்களின் வருமானத்தை மட்டுமே பார்ப்பார்கள். நீங்கள் நல்ல மதிப்பெண் பெற்றிருந்த போதும், தரமான கல்லூரிகளைப் பரிந்துரைக்க மாட்டார்கள். ஏனெனில் அக்கல்வி நிறுவனத்தின் முகவராக அவர்கள் இருக்க மாட்டார்கள்.
முகவர்கள் சரியான தேர்வு அல்ல
முகவர்களிடம் ஆலோசனை பெறச் சென்றால், தேர்வு செய்யும் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை ஒரு வரையறைக்குள்ளேயே இருக்கும். சாதாரணமான கல்லூரி ஒன்றில் இடம் கிடைக்கக்கூடும். அதுபோன்ற கல்லூரிகள் சீட் விற்பனையில்தான் ஈடுபடும். தவறான பாடத்திட்டத்தை தேர்ந்தெடுக்கக்கூடும். படித்து முடித்த பின் கிடைக்கும் வேலைவாய்ப்பு குறித்து முகவர் பொய்யுரைக்கக்கூடும். மிகைப்படுத்திக் கூறுவார். அந்நாட்டின் கலாச்சார சூழலுக்கு ஏற்ப உங்களைத் தயார்படுத்த மாட்டார்கள். அதிக வாழ்வியல் மற்றும் பயணச் செலவினங்களை எதிர்கொள்ள நேரிடும்.
எனவே, உங்களின் வாய்ப்புகளை ஒருபோதும் சுருக்கிக் கொள்ளாதீர்கள். முகவர்கள் பரிந்துரைக்கும் கல்லூரிகளில் இருந்து மட்டுமே தேர்வு செய்யும் சூழலுக்கு ஆளாகாதீர்கள். இதுபோன்ற சூழல்களில் சுய திட்டமிடல் மட்டுமே உங்களை வழிநடத்தக் கூடும். ஒன்றை நன்றாக நினைவில் கொள்ளுங்கள், சுய திட்டமிடல் இல்லாமல், மூன்றாம் நபர் ஆலோசனைகள் ஒருபோதும் பலனளிக்காது.
சில எச்சரிக்கைகள்
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் இன்னும் பொருளாதார மந்தநிலையில் இருந்து முழுமையாக மீளவில்லை. இச்சூழலில் ஆசியர்கள் அங்கு வேலைவாய்ப்பு பெறுவது கடினம்; சொந்த நாட்டவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. உங்களின் தகுதிக்கேற்ற வேலை மட்டுமே அங்கு பார்க்க முடியும். நீங்கள் ஒரு பொறியாளர் என்றால், அது தொடர்பான வேலைதான் பார்க்க வேண்டும். ஒரு சில்லறை வர்த்தக நிறுவனத்தில் காசாளராகவோ, வேறு பணிகளோ பார்க்க முடியாது.
*நீங்கள் தவறான கல்விநிறுவனம் அல்லது விருப்பமற்ற துறையில் சேர்ந்ததாக நினைத்தால், வேறு கல்லூரிக்கு மாறுவது மிகவும் சிரமமான விஷயம். கல்லூரிகள்தான் இம்மாற்றங்கள் குறித்து குடியமர்வுத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டிய பொறுப்பை ஏற்றிருக்கும். எனவே, ஆரம்பத்திலேயே சரியான கல்லூரியைத் தேர்வு செய்வது முக்கியம்.
அமெரிக்கா, இங்கிலாந்து பற்றிய கூடுதல் தகவல்கள்
இங்கிலாந்தின் கல்விக் கலாச்சாரம் பற்றி புரிந்து கொண்ட பிறகே, அங்கு சேர்ந்து பயில்வது பற்றி முடிவெடுக்க வேண்டும். பிரிட்டிஷ் அரசின் அங்கமான பிரிட்டிஷ் கவுன்சில், இங்கிலாந்துக் கல்வி பற்றிய அதிகாரப் பூர்வமான தகவலைத் தருகிறது. டெல்லி பிரிட்டிஷ் கவுன்சில் அரங்கில் புதன் கிழமை தோறும் இங்கிலாந்துக் கல்வி பற்றி தெளிவு படுத்துகின்றனர். இதற்குக் கட்டணம் எதுவும் இல்லை. பெற்றோர்களுக்கும் அனுமதி உண்டு.
குறிப்பிட்ட இடைவெளியில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் இருந்து சிறப்பு விருந்தினர்களை வரவழைத்து கல்விக் கண்காட்சி நடத்துகின்றனர். இதுபோன்ற கண்காட்சிக்குச் செல்லும் போது, சில திட்டமிடல்களுடன் செல்லுங்கள். பிரத்யேகமான கேள்விகளுடன் சென்று, இணையதளத்தில் கிடைக்காத தகவல்களை அவர்களிடம் கேட்டுப் பெறுங்கள். செல்லும் போது, கல்விச் சான்றிதழ் நகல்களை எடுத்துச் செல்ல மறக்க வேண்டாம்.
பிரிட்டிஷ் கவுன்சில் தனது இணையதளத்தில் சில முகவர்கள், பங்குதாரர்கள் பற்றிய பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆனால், அவர்கள் அனைவரும் பிரிட்டிஷ் அரசால் பதிவு பெற்றவர்கள் அல்ல. உரிமம் பெற்ற முகவர்கள் மட்டுமே சரியான தகவலை உங்களுக்குத் தருவர்.
அமெரிக்க கல்வி நிறுவனங்களைப் பொருத்தவரை ஐக்கிய அமெரிக்கா-இந்தியா கல்வி அறக்கட்டளை (USIEF) போதுமான தகவல்களைத் தருகிறது. 18001031231 என்ற கட்டணமில்லாத் தொலைபேசியில் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, இந்தி மற்றும் ஆங்கிலம் இருமொழிகளில் தகவல் பெறலாம்.
அங்கீகரிக்கப்பட்ட பிரிட்டிஷ் கல்வி நிறுவனங்கள் பற்றிய தகவலுக்கு www.ukba.homeoffice.gov.uk என்ற இணைய முகவரியிலும்; அமெரிக்கக் கல்வி நிறுவனங்கள் பற்றிய தகவலுக்கு www.educationusa.state.gov மற்றும் www.chea.org என்ற இணைய தளங்களையும் பார்வையிடலாம். ஏதேனும் முகவர் எளிதாக அமெரிக்க விசா பெற்றுத்தருவதாக வாக்களித்தால் நம்பி விடாதீர்கள். ஏனெனில் அதிகாரிகள் இவ்விஷயத்தில் மிகக்கவனமாக இருப்பர். ஒரு முறை விசா மறுக்கப்பட்டால், மீண்டும் பெறுவது மிகக்கடினம்.

வெளிநாட்டில் கல்வி: விண்ணப்பங்களும், விசா நடைமுறைகளும்-


    வெளிநாடுகளில் உயர்கல்வி மற்றும் ஆய்வு செய்ய விரும்புபவர்கள், அந்தந்த நாடுகளில் உள்ள கல்விச்சூழலை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் கல்வி ஆண்டுகள் வெவ்வேறு விதமாகக் கடைபிடிக்கப்படுகின்றன. விண்ணப்பங்கள், செமஸ்டர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கின்றன. விசா நடைமுறைகளும் வேறு வேறாக இருக்கின்றன. இவை குறித்த அடிப்படை அறிவைப் புரிந்து கொள்வது, வெளிநாடு சென்று பயில விரும்பும் ஒவ்வொருவருக்கும் அவசியமானது.
இந்திய மாணவர்களால் அதிகம் விரும்பப்படும் சில நாடுகளில் உள்ள கல்வி சேர்க்கை விண்ணப்பம் மற்றும் விசா நடைமுறைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா
விண்ணப்பங்கள் சேர்க்கை துவங்குவதற்கு 12 முதல் 18 மாதங்களுக்கு முன்னரே வினியோகிக்கப்படும்.
பிப்ரவரி இறுதி வரை விண்ணப்பிக்கலாம் என்ற போதும், ஆகஸ்ட்டில் இருந்து அக்டோபருக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விடவும். மார்ச் அல்லது மே இறுதிக்குள் நீங்கள் தேர்வு செய்யப்பட்டது குறித்த முடிவு வெளியாகி விடும். செப்டம்பர் - அக்டோபரில் கல்வியாண்டு துவங்கும்.
விசா நடைமுறை
விசா நடைமுறை ஜூனில் துவங்கி ஆகஸ்ட்டில் நிறைவடையும். ஆன்லைனில் கிடைக்கும் டிஎஸ்-160 படிவத்தைப் பூர்த்தி செய்யவும். 600x1200 பிக்சல்களில் போட்டோ காப்பி செய்து, JPG முறையில் 240 கேபிக்கு உட்பட்டு ஸ்கேன் செய்யவும். படிவத்தின் பின்புறம் பார்கோடு பிரின்ட் செய்யவும். விசா கட்டணத்தை அங்கீகரிக்கப்பட்ட எச்டிஎப்சி வங்கிக் கிளையில் செலுத்தவும்.
விசா அலுவலகத்தில் சந்திக்கும் நேரத்தை VFS இணையப்பக்கத்தின் மூலம் உறுதி செய்துகொள்ளவும். பார்கோடு எண், டிஎஸ்160 படிவம், எச்டிஎப்சி யில் செலுத்தியதற்கான ரசீது இல்லாமல், சந்திக்கும் நேரத்தை உறுதி செய்ய முடியாது.
விசா அலுவலகத்துக்குச் செல்லும் நாளன்று, பாஸ்போர்ட், ஆறு மாதங்களுக்குள் எடுக்கப்பட்ட வெண்ணிறப் பின்னணி கொண்ட 2x2 அளவுள்ள புகைப்படம் உட்பட பார்கோடு எண்ணுடன் கூடிய டிஎஸ் 160 படிவம், கட்டணம் செலுத்திய ரசீது போன்றவற்றைக் கொண்டு செல்லவும். விசா VFS வழியாகவோ, கூரியர் மூலமாகவோ அனுப்பி வைக்கப்படும். இந்த விவரங்களையும் ஙஊகு இணையப்பக்கத்தில் அறிந்து கொள்ளலாம்.
இங்கிலாந்து
அக்டோபர் மாதம் முதல் விண்ணப்பங்கள் கொடுக்கப்படும். மார்ச்சுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வெளிநாட்டு மாணவர்கள் ஜூன் வரை விண்ணப்பிக்கலாம். கல்வியாண்டு துவங்குவதற்கு மூன்று மாதங்களுக்கு முன் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். செப்., அக்டோபரில் வகுப்புகள் துவங்கும்.
விசா நடைமுறை
இங்கிலாந்தில் பயில விரும்பும் மாணவர்களுக்காகவே Tier4-students வகையில் விசாக்கள் வழங்கப்படுகின்றன. இம்முறையில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். VAF-9 படிவத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் 255 பவுண்டுகள். கல்விக்கட்டணம் செலுத்திய பின், பல்கலைக்கழகம் வழங்கும் விசா கடிதம் மிகவும் அவசியமான ஒன்று.
விண்ணப்பதாரர், இங்கிலாந்தில் வாழ்வதற்குப் போதுமான அளவு நிதி வைத்திருப்பதற்கானஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். 15 ஆவணங்கள் விசா பெற வைத்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தூதரதகத்தில் நேரடியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். போதுமான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின், அதிகபட்சம் இரண்டு வாரங்களுக்குள் விசா வழங்கப்பட்டு விடும். நேர்முக விசாரணை தேவை என விசா வழங்கும் அதிகாரிகள் நினைக்கும் பட்சத்தில், நீங்கள் நேர்முக விசாரணைக்கு அழைக்கப்படுவீர்கள்.
ஆஸ்திரேலியா
மே மாதத்தில் இருந்து பிப்ரவரி மாதம் வரை விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும். அக்டோபரில் இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நவ., ஜனவரிக்குள் தேர்வு செய்யப்பட்ட பட்டியல் வெளியிடப்படும்.  அக்டோபரில் துவங்கி ஜனவரிக்குள் விசா நடைமுறைக்காலம். பிப்வரியில் வகுப்புகள் துவங்கும். சில பல்கலைக்கழங்களில் செப்டம்பரில் துவங்குவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கின்றன.
விசா நடைமுறை
தொடர்புடைய பல்கலைக்கழகத்தில் முழுநேர படிப்பு பயில சேர்த்துக் கொள்ளப்பட்டதற்கான அங்கீகாரக் கடிதம் CRICOS இடமிருந்து பெற்றவுடன், விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். ஆங்கிலம் தெரிந்திருப்பது மிக அவசியம்.
ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, விசா பெறுவதற்கான நடைமுறை மற்றும் தேவையான ஆவணங்கள் பற்றித் தெரிந்து கொள்ளவும்.
விசா DIAC துறை மூலம் வழங்கப்படும். உங்களின் நிதிப்பின்புலம் பற்றி அதிகாரிகள் விசாரிப்பர். இதுதொடர்பான விவரங்களுக்கு www.cricos.dest.gov.au என்ற இணைய முகவரியில் காணலாம். நிறுவனங்கள் பற்றிய விவரங்களுக்கு www.immi.gov.uk இணையதளத்தைப் பார்வையிடலாம்.
கனடா
சேர்க்கைக்கு 15 முதல் 18 மாதங்களுக்கு முன்பாகவே விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும். செப்டம்பரில் வழக்கமாக வகுப்புகள் துவங்கும். நான்கு வாரங்கள் வரை விசாநடைமுறை இருக்கும். ஜூலை முதல்வாரத்தில் விசா நடைமுறைகளைத் துவக்கி விடலாம்.
வொகேஷனல் சார்ந்த படிப்புகளைப் பயில விரும்பும் மாணவர்கள் பெரும்பாலும் கனடாவையே தேர்வு செய்கின்றனர். உடனடி வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் என்ற அளவிலேயே மாணவர்கள் மனதில் பதிந்து போயிருக்கிறது. மக்கள் அடர்த்தி குறைவான இந்நாட்டில், மிக அதிக சம்பளத்துடன் வேலை கிடைக்கிறது.  இங்கு வணிக மேலாண்மை, பொறியியல், ஊடகம், விருந்தோம்பல், கம்ப்யூட்டர் சயின்ஸ் துறைகளில் அதிகளவு  இந்திய மாணவர்கள் சேர்கின்றனர்.
விசா நடைமுறை
விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கு முன், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் உங்களை ஏற்றுக் கொள்ளப்பட்ட சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். போதுமான நிதிஆதாரம் இருப்பதற்கான ஆவணங்களும் அவசியம். விசா கட்டணமாக ஏறக்குறைய 5,500 ரூபாயும், செயல்பாட்டுக் கட்டணமாக 700 ரூபாயும் செலுத்த வேண்டும்.
மாணவர் விசா நடைமுறை 30 நாட்கள் வரை இருக்கலாம். முதல்கட்ட நடைமுறைகளுக்குப் பின், மருத்துவ தகுதிச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.
பிரான்ஸ்
செப்டம்பர் மாதங்களில் வகுப்பு துவங்கும். கல்வியாண்டு துவங்க மூன்று மாதங்களுக்கு முன் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். பிப்ரவரி/மார்ச் மாதங்களில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும். மே இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கலை மற்றும் வடிவமைப்பில் ஆர்வம் மிக்க இந்திய மாணவர்களை, பிரான்ஸ் வரவேற்கிறது. அத்துறையில் உயர்கல்வி பயில பிரான்ஸ் மிகச்சிறந்த இடமும் கூட. படிப்பை நிறைவு செய்த பின் ஆறு மாதங்களுக்கு விசா நீட்டிக்கப்படுகிறது. அக்காலகட்டத்தில் நீங்கள் அங்கு வேலைவாய்ப்பையும் தேடலாம்.
விசா நடைமுறைபிரான்ஸ் VFS இணையதளத்தில் இருந்து படிவங்களைத் தரவிறக்கம் செய்யலாம். புகைப்படம் தொடர்பாக கொடுக்கப்பட்டிருக்கும் விதிகளை கவனமாகப் பின்பற்றவும். டெல்லி, புதுவை, கொல்கத்தா, மும்பையில் தூதரகம் உள்ளது. பாஸ்போர்ட், கேம்பஸ் பிரான்ஸ் அடையாள எண்(பிரின்ட்அவுட்), கல்வி நிறுவனத்தில் பதிந்ததற்கான சான்று, கல்விச் சான்றிதழ்கள், பயணச்சீட்டு அல்லது பி.என்.ஆர்., எண், குடியிருப்புச் சான்றிதழ், விசா கட்டணம் முதலியற்றைச் செலுத்த வேண்டும்.
மூன்று மாதங்களுக்கு மேல் தங்கியிருக்கும் வெளிநாட்டு மாணவர்கள், அதற்கான பிரத்யேக குடியிருப்புச் சான்றிதழைப் பெற வேண்டும்.
ஜெர்மனி
குளிர்கால வகுப்புகள் அக்டோபரிலும், கோடை கால வகுப்புகள் ஏப்ரலிலும் துவங்குகின்றன. கோடை வகுப்புக்கு ஜனவரி 15ம் தேதிக்கு முன்னரும், குளிர்கால வகுப்புக்கு ஜூலை 15ம் தேதிக்கு முன்னரும் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
பயணத்துக்கு மூன்று மாதங்களுக்கு முன், விசாவுக்கான விண்ணப்ப நடைமுறைகளைத் துவக்குவது நல்லது. பொறியியல், கணிதம், இயற்கை அறிவியல், சமூகவியல் பாடங்கள் தொடர்பாகவே இந்திய மாணவர்கள் அதிகளவில் ஜெர்மனி செல்கின்றனர். 300க்கும் மேற்பட்ட சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட துறைகளில் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. மாணவர்களும், பேராசிரியர்களும் படிப்பின் துவக்கத்தில் ஆய்வுகளில் ஈடுபடுகின்றனர். செலவினங்கள் அதிகமாகும் நாடு என்ற போதும், பயன்படுத்தப்பட்ட பொருட்கள் விற்பதற்கென்றே ஏராளமான கடைகள் உள்ளன. நாட்டினுள் சென்றதும், குடியமர்வுத்துறை அதிகாரிகளிடம் பதிவு செய்ய வேண்டும்.
விசா நடைமுறை
பல்கலைக்கழகத்தில் இருந்து பெறப்பட்ட அங்கீகாரச் சான்றிதழ், முந்தைய கல்விச் சான்றிதழ்கள், ஒராண்டுக்கான செலவை சமாளிக்கும் விதத்திலான நிதிப்பின்புல உத்தரவாதத்தை சமர்ப்பிக்க வேண்டும்.  முழு உடல் பரிசோதனை செய்து கொண்ட சான்றிதழ். போதை மருந்துகள் உட்கொள்வது தொடர்பான பரிசோதனையும் இதில் அடக்கம். விசா கட்டணம் 4,000 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது.

-

வெளிநாட்டுக் கல்வியை சாத்தியமாக்கும் கல்வி உதவித்தொகைகள்


வெளிநாட்டில் உயர்கல்வி பயில ஆசையும், தகுதியும் இருந்த போதும் பொருளாதார வசதி சிலருக்கு போதுமானதாக இருக்காது. அவர்களுக்கு பல்வேறு உதவித் தொகைகள் கைகொடுக்கின்றன. சில உதவித்தொகைகள் கூடுதலாக நம்மிடம் இருந்து பணத்தைச் செலவு செய்ய வேண்டிய தேவை இன்றி, மாணவரின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்பவையாக இருக்கின்றன. சில கல்வி உதவித்தொகைகள் பற்றிய விவரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.
ஸ்மார்ட் 2012
சிங்கப்பூர் MIT Alllaince for research and Technology(SMART) நிறுவனம் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபடுவோருக்கு உதவித்தொகை வழங்குகிறது. Biosystems and Micromechanics, center for environmental sensing and modeling, Future Urban Mobility, Infectious diseases என்ற நான்கு துறைகளில் ஆய்வு மேற்கொள்ள,மொத்தம் நான்கு பேருக்கு வழங்கப்படுகிறது.
ஆண்டு ஊதியமாக 85 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்களும்(இந்திய மதிப்பில் 32 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்); ஆய்வு ஊக்கத்தொகையாக 40 ஆயிரம் டாலர்கள்; பயணப்படியாக 5,000 டாலர்கள் வழங்கப்படுகின்றன.
வரும் 2012 டிச.,க்குள் முனைவர் பட்ட ஆய்வைப் பெறுபவர்களாக இருக்க வேண்டும். வரும் டிச., இறுதி வரை விண்ணப்பிக்கலாம். ஆய்வுத்திட்ட அறிக்கை, ஆய்வேடுகள் சமர்ப்பித்திருத்தல், ஆய்வுக்கட்டுரைகள் வெளியிட்டிருத்தல் உள்ளிட்ட தகுதிகளின் அடிப்படையில் பயனாளி தேர்வு செய்யப்படுவார்.
ஹாங்காங் முனைவர் பட்ட உதவித்தொகை
ஹாங்காங் ஆய்வு மானியக்குழுவால் கடந்த 2009ல் இத்திட்டம் துவக்கப்பட்டது. ஐந்து பள்ளிகளில் 31 பாடப்பிரிவுகளில் முழு நேர முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபடுவோருக்காக இவ்வுதவித் தொகை வழங்கப்படுகிறது.
அறிவியல், பொறியியல், வணிக மேலாண்மை, மனிதவியல் மற்றும் சமூகஅறிவியல், சூழலியல் அறிவியல், உயிரிப் பொறியியல், கடல்சார் சூழலியல் அறிவியல் என்ற ஐந்து துறைசார்ந்த பள்ளிகளில் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மாதாந்திர ஊக்கத்தொகை ஒருலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்; பயணப்படி 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மொத்தப் பயனாளிகளின் எண்ணிக்கை 135 பேர். அரசு நிதியின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனத்தில் முழுநேர முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபடுபவராக இருக்க வேண்டும். மூன்றாண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
வரும் டிசம்பர் இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு  www.ust.hk/hkpfs/index.html என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
ஃபெலிக்ஸ்(Felix)உதவித்தொகை
Felix  உதவித்தொகையானது ஆக்ஸ்போர்டு  பல்கலைக்கழகம் அல்லது லண்டன் ஸ்கூல் ஆப் ஓரியண்டல் அண்டு ஆப்ரிகன்  ஸ்டடிஸ்- கல்லூரியில் (SOAS) பயில்வதற்கு வழங்கப்படுகிறது. மருத்துவம் தவிர, இக்கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் அனைத்துப் படிப்புகளுக்கும் இது பொருந்தும்.
கல்வி நிறுவனத்தின் முழு கட்டணம், வாழ்வதற்கான செலவினமும், இந்தியா -பிரிட்டன் இடையேயான விமானக் கட்டணமும் படிப்பின் துவக்கத்தில் இருந்து மூன்றாண்டு நிறைவு வரைக்கும் வழங்கப்படுகிறது.
கல்வி நிறுவனத்துக்கு 20 பேர் வீதம் பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். கடந்த ஜன., அன்று 30 வயதை நிறைவு செய்யாதவராக இருக்க வேண்டும். நிதித்தேவையை தெளிவுபடுத்த வேண்டும். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். படிப்பை நிறைவு செய்தவுடன், தங்களின் சொந்தநாட்டுக்கு திரும்பி விடுவதை இங்கிலாந்து அரசாங்கம் எதிர்பார்க்கும்.
காமன்வெல்த் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
உயர்கல்விக்காக உதவித்தொகையை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு இதைவிட சிறந்த வாய்ப்புக் கிடைக்காது. வேறெந்த உதவித்தொகையும் இந்த அளவுக்கு செலவினங்களை உள்ளடக்கி இருக்குமா என்பதும் சந்தேகமே. சுருக்கமாகச் சொல்வதானால், எழுதும் பென்சிலில் இருந்து, உடுத்தும் ஆடை வரை; திருமணமாகி குழந்தைகள் இருப்பின் அவர்களின் செலவினத்தையும் உள்ளடக்கிய உதவித்தொகை காமன்வெல்த் உதவித்தொகையாக மட்டுமே இருக்கும்.
பிரிட்டிஷ் பேரரசின் ஆதிக்கத்தில் இருந்த நாடுகள் உட்பட 54 நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு காமன்வெல்த் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
துறைகள்
கேன்சர் தொடர்பான மருத்துவப்பயிற்சி மற்றும் ஆறுமாத ஆய்வு, இதயம், மகப்பேறு, மருந்தியல், பல்மருத்துவம், எலும்புமூட்டு, நரம்பியல், காது-மூக்கு-தொண்டை உள்ளிட்ட மருத்துவம் தொடர்பான முதுநிலை மற்றும் பிஎச்.டி., படிப்புகள்; பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், பயன்பாட்டு அறிவியல், அறிவியல், வேளாண்மை, மானுடவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட துறைகளில் ஆய்வு மற்றும் உயர்கல்வி
மேற்கொள்ளலாம்.
கல்வித்தகுதி
முதுநிலை படிப்பில் சேர இளநிலைப்பட்டம் நிறைவு செய்திருக்க வேண்டும். மானுடவியலில் குறைந்தது முதல் வகுப்பிலும்; மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பத்தில் 65 சதவீதமும் பெற்றிருக்க வேண்டும்.
பிஎச்.டி.,க்கு முதுநிலை வகுப்பில் மேற்கூறிய அளவு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
மருந்தியல் மற்றும் பல் மருத்துவப் பயிற்சிக்கு டாக்டராகவோ, பல் மருத்துவராகவே அக்., 2002ல் இருந்து செப்., 30 2007ம் ஆண்டுக்குள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2002க்கு முன் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உதவித்தொகை சலுகையில் சிறிது வேறுபாடு உண்டு. அதுகுறித்த விவரங்களை http://bit.ly/cscuk-apply என்ற இணைய முகவரியில் பெறலாம். ஆங்கில மீடியத்தில் தங்கள் படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
உதவித்தொகையின் விவரம்
அங்கீகரிக்கப்பட்ட கல்வி மற்றும் தேர்வுக்கட்டணம், விமானக்கட்டணம், லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் பயிலும் மாணவர்களுக்கு முதன்முறை வருகை, ஆய்வுக்கட்டுரை, உடைகள், பயணப்படி; திருமணமானவராக இருப்பின் மாதம் 220 யூரோ; கள ஆய்வுக்கு சென்றால் அதற்கான செலவுத்தொகை வழங்கப்படும்.
மொத்தம் 25 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விவரங்களுக்கு www.education.nic.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
CCAPS Pre-Doctoral Dissertation Fellowship
CCAPS நிறுவனம் ஆப்ரிக்காவில் பருவநிலை மாறுபாடுகள் மற்றும் அரசியல் நிலைப்புத் தன்மை தொடர்பாக டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பயில்பவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறது. ஆப்ரிக்காவில் எங்கு, எப்படி பருவநிலை மறுபாடுகள் அச்சுறுத்துகின்றன, நிலையானவையாக இருக்கின்றன; தேர்ந்த ஆட்சிமுறைக்கான வியூகங்கள்; சர்வதேசநாடுகளின் உதவி ஆப்ரிக்க சமூகத்தில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது உள்ளிட்ட துறைகளில் ஆய்வு மேற்கொள்ளலாம்.
இளநிலை முனைவர் பட்டமாக இந்த ஆய்வை மேற்கொள்ளலாம். ஒன்பது மாதங்களுக்கான கல்வி உதவித்தொகையாக 24 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மற்றும் ஒரு முறை சென்று, திரும்புவதற்கான விமானக்கட்டணம் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
சமூக மற்றும் இயற்கை அறிவியல் பிரிவில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருப்பவராக இருத்தல் வேண்டும். வரும் பிப்ரவரி 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு http://ccaps.robertstrausscenter.org என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வுக்கால மேம்பாட்டு உதவித்தொகை
தாவரஅறிவியல் பிரிவுகளில் இளநிலை ஆய்வாளர்களை புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள ஊக்குவிக்கும் பொருட்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இந்த உதவித்தொகையை வழங்குகிறது. முதல்கட்டமாக மூன்று ஆண்டுகளுக்கும், பல்கலையின் அனுமதியுடன் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கும் உதவித்தொகை நீட்டிக்கப்படும். ஆண்டுக்கு 40 ஆயிரம் பவுண்டுகளும், ஆய்வுக்குத் தேவையான வரையறுக்கப்படா நிதியும் வழங்கப்படும்.
தாவரவியல் துறை தொடர்பான ஆய்வகத்தில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் மேற்கொண்ட ஆய்வுகள் தொடர்பான சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களுக்கு காலக்கெடு எதுவும் இல்லை. ஆண்டுக்கு மூன்று முறை பரிசீலிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு http://www.slcu.cam.ac.uk என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
Guest scholarship program for PhD and post-doctoral studies in sweeden
சுவீடன் பல்கலைக்கழகத்தில் அனைத்துத் துறை தொடர்பான உயர்கல்வி மற்றும் ஆய்வுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. மொத்தம் 50 பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். முனைவர் பட்ட மாணவர்களுக்கு உதவித்தொகையாக இந்திய மதிப்பில் 85 ஆயிரத்து 554 ரூபாய் மாதந்தோறும் வழங்கப்படும். ஆய்வாளர்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சத்து 7000 ரூபாய் வழங்கப்படும். பயணப்படியாக 71 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். நோய், விபத்துக் காப்பீடு போன்றவையும் உண்டு.
ஆறு, 12, 18 மாதங்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும். முதுமுனைவர் பட்ட ஆய்வாளர்கள், பிஎச்.டி., முடித்திருக்க வேண்டும். உதவித்தொகை வழங்குவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய நாளில் இருந்து அவர் சுவீடனில் வசிப்பவராக இருக்கக் கூடாது. சுவீடன் நிரந்தரமாகத் தங்குவதற்கான உரிமை, பணி செய்வதற்கான உரிமை பெற்றிருக்கக் கூடாது. ஐரோப்பிய யூனியன் குடிமகனாக இருத்தல் கூடாது. வரும் ஜனவரி இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு www.studyinsweeden.se/scholarships/SI-scholarships/Guest-scholarship-program என்ற இணைய முகவரியைப் பார்க்கலாம்.
IPRS - ஆஸ்திரேலிய உதவித்தொகை
ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் இவ்வுதவித்தொகை வழங்கப்படுகிறது. அங்குள்ள பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடர விரும்புவோர்களுக்கு வழங்கப்படுகிறது. முழு கல்விக்கட்டணம், மருத்துவக் காப்பீடை இந்த உதவித்தொகை உள்ளடக்கி உள்ளது. இந்த உதவித்தொகைக்கு வரி எதுவும் செலுத்த வேண்டியதில்லை. இதற்கு முன், ஆஸ்திரேலிய அரசின் உதவித்தொகையை ஆறு மாதங்களுக்கு மேற்பட்டு பெற்றிருத்தல் கூடாது. இந்த உதவித்தொகையின் 75 சதவீத அளவுக்கு வேறு உதவித்தொகைகள் எதையும் கூடுதலாக பெற்றிருக்கக்கூடாது. வரும் ஜனவரியில் ஆய்வு துவங்கும். நவம்பர் இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு  www.qut.edu.au./study/fees-and-scholarships/scholarships-and-prizes/interna ional-postgraduate-research-scholarships-iprs என்ற இணையதள முகவரியைப் பார்வையிடலாம்.
Westminster International Scholarships
வளரும்நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் முழுநேரப் படிப்பாக உயர்கல்வியைத் தொடர இந்த உதவித்தொகையை இங்கிலாந்தின் University of Forward thinking வழங்குகிறது.
முழு கல்விக்கட்டணம், தங்குவதற்கான செலவினம், வாழ்வுச் செலவினம், விமானக் கட்டணத்தை இந்த உதவித்தொகை உள்ளடக்கி உள்ளது. பாடத்திட்டத்தைப் பொருத்து வழங்கும் உதவித்தொகைக்கான கால அளவு மாறுபடும்.
முதுநிலைப்படிப்புக்கான சேர்க்கை பெற்ற, வளரும் நாட்டைச் சேர்ந்த மாணவர் விண்ணப்பிக்கலாம். நவம்பர் இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.westminster.ac.uk/study/fees-and-funding/scholarships/january-2012/westminster-international-scholarships என்ற இணைய முகவரியைப் பார்வையிடலாம்.
மேலாண்மைக் கல்விக்கான புல்பிரைட் உதவித்தொகை
அமெரிக்கா- இந்திய கல்வி அறக்கட்டளை (USIEF) சார்பில் பல்வேறு உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. அமெரிக்காவின் ஃபுல்பிரைட் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக்கழகம் Fullbrght-Nehru-CII Fellowships for Leadership in Management at US என்ற பெயரில் மேலாண்மை பயில உதவித்தொகை வழங்குகிறது. பென்சில்வேனியா மாகாணம் பிட்ஸ்பர்க்கில் அமைந்துள்ள கார்னேஜ் மெலன் பல்கலைக்கழகத்தின் டெப்பர் ஸ்கூல் ஆப் பிசினசில் பயில வேண்டும்.
உதவித்தொகை பெறும் மாணவருக்கு ஒ-1 விசா, விமானக்கட்டணம், முழு கல்விக்கட்டணம், பராமரிப்புக் கட்டணம், தகவமைத்துக் கொள்வதற்கான உதவித்தொகை, விபத்து மற்றும் மருத்துவக் காப்பீடு என அரசாங்க வழிகாட்டுதலின் படி பெரும்பான்மைச் செலவினங்களை உள்ளடக்கியதாக, இவ்வுதவித்தொகை அமையும்.
பட்டம் பெற்றிருப்பதுடன், ஐந்தாண்டு நிர்வாகப்பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டம். 45 அல்லது அதற்கு உட்பட்ட வயதுடையவராக, ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும். விண்ணப்பிக்கும் போது இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும். அமெரிக்காவில் வசிப்பவராகவோ, கிரீன்கார்டு பெற்றவராகவே அதற்கு விண்ணப்பித்தவராகவோ இருக்கக்கூடாது.
இம்மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.usief.org.in/scripts/ForIndianNationalsForProfessinalsFullbright-Nehru-CIIFellowshipsinManagement.aspx  என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
ஞாபக மறதி உள்ளவரா நீங்கள்...-




குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அதிகமாக இருக்கும் பிரச்னைகளில் முக்கியமானது ஞாபக மறதி. உடலை உறுதியாக பராமரிப்பது போல், நமது எண்ணங்களை நினைவில் வைக்கும் திறனை அதிகரிக்க வேண்டும். அதற்கான வழிகள்:

* அறிவை பெருக்கும் விளையாட்டுகள்:
நினைவுத் திறனை கூர்மையாக்கும், அறிவுப்பூர்வமான விளையாட்டுகளை விளையாடுங்கள். உதாரணமாக செஸ், கேரம் போர்டு, குறுக்கெழுத்துப் போட்டி போன்ற விளையாட்டுகள் மூளையை கூர்மையாக்கும். நினைவுத் திறன், கவனம், ஒரு செயலின் மீது கருத்தை நிலைநிறுத்துதல் போன்றவற்றை மேம்படுத்தும்.

* நன்கு தூங்குங்கள்:
தூக்கத்தை பொறுத்து நினைவுத்திறன் மாறுபடும். போதுமான தூக்கத்தை பெறவில்லையென்றால் ஞாபக மறதியை ஏற்படுத்தும். தூக்கத்தில் ஏதேனும் நினைவுகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தினால் முழுமையான தூக்கத்தை பெற முடியாது. இது போன்ற காரணங்கள் நினைவுத் திறனை குறைக்கும்.

* வெவ்வேறு இடங்களில் அமர்ந்து படியுங்கள்:
ஞாபக மறதி உள்ள மாணவர்கள், வெவ்வேறு இடங்களில் அமர்ந்தோ, நடந்து கொண்டோ படியுங்கள். மாலை நேரத்தில் படிக்கும் பாடங்களை, அடுத்த நாள் காலை, மற்றொரு முறை பார்வையிடுவது நல்லது. அவ்வாறு செய்வதால் படித்த பாடங்கள் மனதில் பதியும்.

* எண்ணங்களை கற்பனை செய்யுங்கள்:
பாடத்தில் உள்ள படங்கள், அட்டவணைகள், கிராபிக்ஸ்கள் போன்றவற்றை பார்த்தவுடன், எண்ணங்களில் ஏற்படும் கற்பனைகள் மற்றும் கருத்துக்களை குறிப்பேட்டில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். புத்தகத்தில் உள்ள முக்கியமான வாக்கியங்கள், வார்த்தைகளை வண்ணங்கள் கொண்டு கோடிட்டு வையுங்கள். இவற்றின் வாயிலாக, எளிமையாக பாடங்களை நினைவில் வைத்துக்கொள்ளலாம்.

* எழுதும் பழக்கத்தை கொண்டு வாருங்கள்:
குறிப்பேடு அல்லது டைரியில் பாடங்கள் தவிர, நினைவில் வைத்துக் கொள்ள விரும்புவதை எழுதுங்கள். உதாரணமாக, பாடம் தொடர்பான சூத்திரங்கள், குறியீடுகள், போன்றவற்றை எழுதி வையுங்கள். எழுதியவற்றை நேரம் கிடைக்கும் பொழுது படித்துப் பாருங்கள். இதனால் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஞாபகத்தில் இருக்கும்.

* நினைவூட்டும் தந்திரங்கள்:
ஒரு பொருளையோ, நபரையோ, செய்தியையோ நினைவில் வைக்க விரும்புவோர், புகைப்படங்கள், வார்த்தைகள், வாக்கியங்கள், ஜோக்குகள், பாடல்கள், இணைப்பு வார்த்தைகள், வார்த்தைகளில் உள்ள எதுகை, மோனைகள் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

Saturday, November 5, 2011

Eid-ul-Adha - 6th Nov 2011

Eid-ul-Adha ('festival of Sacrifice'), also known as the Greater Eid, is the second most important festival in the Muslim calendar.

The festival remembers the prophet Ibrahim's willingness to sacrifice his son when God ordered him to.

The story of Ibrahim's sacrifice

Eid-ul-Adha celebrates the occasion when Allah appeared to Ibrahim in a dream and asked him to sacrifice his son Isma'il as an act of obedience to God.

The devil tempted Ibrahim by saying he should disobey Allah and spare his son. As Ibrahim was about to kill his son, Allah stopped him and gave him a lamb to sacrifice instead.

Note: This story is also found in the Jewish Torah and the Christian Old Testament (Genesis 22). Here God asked Abraham to sacrifice his son Isaac, his son with Sarah. Isma’il was his son with Hagar.
Celebrations

Eid ul Adha is a public holiday in Muslim countries.

Today Muslims all over the world who can afford it , sacrifice a sheep (sometimes a goat) as a reminder of Ibrahim's obedience to Allah. In Britain, the animal has to be killed at a slaughterhouse.

They share out the meat among family, friends and the poor, who each get a third share.

Eid usually starts with Muslims going to the Mosque for prayers, dressed in their best clothes, and thanking Allah for all the blessings they have received.

It is also a time when they visit family and friends as well as offering presents.

At Eid it is obligatory to give a set amount of money to charity to be used to help poor people buy new clothes and food so they too can celebrate.
Hajj

Pilgrams on HajjThe Hajj is pilgrimage to Makkah.

It is the Fifth Pillar of Islam and therefore a very important part of the Islamic faith.

All physically fit Muslims who can afford it should make the visit to Makkah, in Saudi Arabia, at least once in their lives.

Every year around 2 million Muslims from all over the world converge on Makkah.

They stand before the Kaaba, a shrine built by Ibrahim praising Allah together.

The Hajjis or pilgrims wear simple white clothes called Ihram which promote the bonds of Islamic brotherhood and sisterhood by showing that everyone is equal in the eyes of Allah.

During the Hajj the Pilgrims perform acts of worship and they renew their faith and sense of purpose in the world.

HAPPY EID-UL-AHDA

Thursday, September 15, 2011

 துண்டு துண்டாய் பூமியில் விழப் போகும் நாசா செயற்கைக்கோள்

வாஷிங்டன்: கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சூரியன் மற்றும் பூமியின் வளிமண்டலத்தை குறித்த தகவல்களை திரட்ட நாசா செலுத்திய செயற்கைக்கோள் இன்னும் ஒரு சில மாதங்களில் துண்டு, துண்டாக பூமியை வந்தடையவிருக்கிறது.

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கடந்த 1991ம் ஆண்டு உயர் வளிமண்டல ஆராயச்சி செயற்கை கோளை (யு.ஏ.ஆர்.எஸ்.) விண்ணில் செலுத்தியது.

கடந்த 2005-ம் ஆண்டு அந்த செயற்கைக்கோள் செயல் இழந்தது. இதையடுத்து அது பூமியின் வளி மண்டலத்தில் நுழையவுள்ளது. அந்த செயற்கைக்கோள் பூமியை வந்தடையும்போது துண்டு, துண்டுகளாக வந்து விழும். அதில் பெரும்பாலான பகுதி பூமிக்குள் நுழையும்போதே எரிந்து போய்விடும்.

இருந்தாலும் அதன் சில பகுதிகள் அப்படியே வந்து விழ வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாசா இணைதளத்தில் வெளியான செய்தியில் கூறியிருப்பதாவது, கடந்த 1950-ம் ஆண்டில் இருந்து செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. இது வரை விண்ணில் செலுத்தப்பட்ட எந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியில் வந்து விழுந்து யாரும் காயம் அடைந்ததாகவோ, பொருட்சேதம் ஏற்பட்டதாகவோ தகவல் இல்லை.

யு.ஏ.ஆர்.எஸ். செயற்கைக்கோள் 6.5 டன் எடை கொண்டது. இது கடந்த 2005-ம் ஆண்டில் செயல் இழந்தது. இதைவிட பெரிய செயற்கைக்கோள்கள் எல்லாம் பூமிக்குள் எரிந்து விழுந்துள்ளன. இதனால் யாருக்கும் காயம் ஏற்பட்டதில்லை.

செயல் இழந்த செயற்கைக்கோள்களை கடலில் விழச்செய்வது தான் வழக்கம். ஆனால் யு.ஏ.ஆர்.எஸ். செயற்கைக்கோளில் எரிபொருள் இல்லாததால் அதன் செயல்பாட்டை கட்டுப்படுத்த முடியாது. எனவே, அது தானாக வந்து பூமியில் விழும். அதன் பெரும்பாலான பகுதிகள் வளிமண்டலத்திலேயே எரிந்துவிடும்.

யு.ஏ.ஆர்.எஸ். பூமிக்கு வர இன்னும் ஒரு சில மாதங்களாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அது எப்பொழுது விண்ணில் இருந்து கிளம்பும் என்று உறுதியாகக் கூறமுடியாது.

அது பெரும்பாலும் அமெரிக்காவில் விழுவதற்கு வாய்ப்புள்ளது. அவ்வாறு அது விழுந்தால் 750 கி.மீ. பரப்பளவில் அதன் பாகங்கள் சிதறி விழலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Friday, September 9, 2011

விண்வெளியில் அதிகரிக்கும் கழிவுகளால் செயற்கைக்கோள்களுக்கு ஆபத்து

பூமியில் இருந்து விண்வெளிக்கு உலக நாடுகள் செயற்கை கோள்களை அனுப்புகின்றன. ராக்கெட் மூலம் செலுத்தப்படும் அவை விண்வெளிக்கு செல்லும் போதும், சென்ற பிறகும் பழுதடைகின்றன. இதனால் உடைந்து நொறுங்கும் ராக்கெட்டின் உதிரிபாகங்களும், செயற்கை கோள்களின் பாகங்களும் காற்று இல்லாததால் விண் வெளியில் பூமியை சுற்றி மிதந்தபடி இருக்கின்றன. மேலும் அவை மணிக்கு 28,164 கி.மீட்டர் வேகத்தில் பூமியை நெருங்கி வருகின்றன. இதனால் பூமியை நெருங்கி நிலை நிறுத்தப்பட்டுள்ள செயற்கை கோள்கள் மீது மோதும் அபாயம் உள்ளது. இது பற்றி ஆய்வு மேற்கொண்டு வரும் டொனால்டு கெஸ்லர் என்பவர் கூறும் போது, கடந்த 2007ல் சீனா அனுப்பிய ராக்கெட் ஒன்று வானிலை செயற்கைக்கோள் ஒன்றை மோதி அழித்தது. இதனால் 1 செ.மீ. அளவுக்கு அதிகமான சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் துண்டுகள் உருவாகின. அதே போல் 2009ல் இரு செயற்கைக்கோள்கள் அதன் சுற்றுப்பாதையில் சுழலும் போது ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இந்த இரு நிகழ்வுகளாலும் பூமியை சுற்றி கடந்த 25 வருடங்களில் இல்லாத அளவிற்கு விண்வெளி கழிவுகள் அதிகமாக தேங்கியுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் விண்கலத்தில் செயற்கை தோட்டம் அமைக்க நாசா முடிவு

அமெரிக்காவின் விண்வெளி கழகமான நாசா செவ்வாய் கிரகத்திற்கு முதன்முதலாக விண்வெளி வீரர்களுடன் கூடிய விண்கலத்தை 2030ம் ஆண்டில் அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தில் விண்வெளி வீரர்களுக்கு உணவு வழங்குவது சற்று கடினமான விசயம். இது பற்றி டெக்சாஸ் மாகாணத்தில், ஹூஸ்டன் நகரில் அமைந்துள்ள நாசாவின ஸ்பேஸ் புட் சிஸ்டம்ஸ் லேபரட்டரியை சேர்ந்த மாயா கூப்பர் என்பவர் கூறும் போது, செவ்வாய் கிரகத்தில் மேற்கொள்ளப்படும் 5 வருட ஆராய்ச்சி பணியில் ஏறக்குறைய ஒரு நபருக்கு 3,175 கி.கிராம் அளவிற்கு உணவு தேவைப்படும். அவர்களுக்கு தொடர்ந்து உணவு அனுப்புவது என்பது திட்டப்பணிகளில் சவாலான ஒன்றாக உள்ளது. எனவே, உணவிற்கு தேவையான கேரட், தக்காளி உள்பட 10 வகையான செடிகள் கொண்ட தோட்டத்தை செவ்வாய் கிரக சூழலுக்கேற்ப அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விண்கலத்தில் இதனை வளர்க்க குறைந்த இடமே போதுமானது. மேலும், ஆரோக்கியமான உணவு கிடைப்பதுடன் விண்கலத்தில் கார்பன்-டை-ஆக்சைடு நீங்கி தேவையான ஆக்சிஜனும் கிடைக்கும் என கூறினார்.
சந்திரனுக்கு புதிய விண்கலம்: அடுத்த மாதம் அனுப்புகிறது நாசா

சந்திரனுக்கு அமெரிக்கா புதிய விண்கலம் ஒன்றை அனுப்ப திட்டமிட்டுள்ளது. க்ரேய்ன் என பெயரிப்பட்ட இந்த விண்கலம் வரும் செப்டம்பர் மாதம் புளோரிடா மாகாணத்திலுள்ள கேப் கானவெரல் விமான தளத்திலிருந்து அனுப்பப்படுகிறது. ஒன்பது மாதங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள இந்த விண்கலத்தை ஏவும் பணியில் அமெரிக்காவின் நாசா அமைப்பு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
நட்சத்திரத்தை விழுங்கிய அதிக சக்தி வாய்ந்த கருந்துளை: விண்வெளி வரலாற்றில் ஓர் அரிய நிகழ்வு
விண்வெளியில் அதிக சக்தி வாய்ந்த கருந்துளைகள் உள்ளன. இவை தங்களுக்கருகில் இருக்கும் அனைத்தையும் உள்ளிழுத்து கொள்ளும் ஆற்றல் பெற்றவை. தற்போது அத்தகைய கருந்துளைகளில் ஒன்று நட்சத்திரம் ஒன்றை சிதறடித்து பின் தனக்குள்ளே உள் வாங்கிய அரிய நிகழ்ச்சியை வானியலாளர்கள் முதன் முறையாக கண்டறிந்துள்ளனர். பூமியிலிருந்து 4 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் நடந்துள்ள இது போன்ற நிகழ்வு இதற்கு முன்பு கண்டறியப்படாதது. பொதுவாக கருந்துளைகளின் மையம் சூரியனைப்போன்று 100 கோடி மடங்கு அதிக வலிமை கொண்டதாக இருக்கும். தற்போது நடைபெற்ற நிகழ்வில், கருந்துளையானது தன்னிடமிருந்து 3.9 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்த நட்சத்திரத்தை, அதிக சக்தி வாய்ந்த காஸ்மிக் ஜெட் எனப்படும் தனிப்பட்ட சக்தியால் சிதறடித்து பின் தன்னுள் இழுத்து கொண்டுள்ளது. இதனால் ஏற்பட்ட ஒளி வெள்ளம் அதனை படம் பிடித்த நாசாவின் ஸ்விப்ட் தொலைநோக்கிக்கு அடுத்த ஒரு வடருடத்திற்கு தேவையான ஒளியை வழங்குமளவிற்கு பிரமாண்டமாய் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விண்வெளியில் கடந்த மார்ச் மாதத்திலிருந்து எக்ஸ் கதிர்களின் அலைவீச்சு அடிக்கடி நிகழ்ந்து வந்ததையும் ஸ்விப்ட் தொலைநோக்கி அவ்வப்போது நாசாவிற்கு தெரிவித்து வந்தது. அதனை தொடர்ந்து ஆராய்ந்ததில் இந்த அரிய நிகழ்வு தற்போது உலகிற்கு தெரிய வந்துள்ளது. மற்றும் நட்சத்திர மண்டலத்தில் 100 மில்லியன் வருடங்களுக்கு ஒரு முறை இது போன்ற நிகழ்வு நடைபெறும் என பென்சில்வேனியா மாநில பல்கலைகழகம் மற்றும் ஹார்வேர்டு ஸ்மித்சோனியன் வானியல் அமைப்பு ஆகிய குழுவை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இங்கேயும் அதே கதைதான் ! சிம்பன்ஸிகளில் ஆண்களைக் காட்டிலும் பெண்களே புத்திசாலிகள்

பெல்ஜியம் நாட்டில் இரு உயிரியல் பூங்காவில் உள்ள ஆண், பெண் மனிதக்குரங்குகளுக்கிடையே உள்ள திறமைகளைக் கண்டுகொள்ள நடத்தப்பட்ட ஆறு போட்டிகளில் பெண் சிம்பன்ஸிகளே தன் புத்திசாலித்தனத்தை வெளிக்காட்டி வெற்றி பெற்றது. பெண் சிம்பன்ஸிக்கள், போட்டிக்காக சற்று கைக்கு எட்டாமல் சற்று தொலைவில் வைக்கப்பட்டிருந்த தின்பண்டங்கள், கொட்டைகள் ஆகியவற்றை எடுக்க சின்ன மரக்கிளைகள், குச்சிகள் போன்றவற்றின் துணைகொண்டு அந்த பழங்களையும், கொட்டைகளை லாவகமாக எடுத்ததுடன் அல்லாது, சிறு கற்கள் மூலம் பழக்கொட்டைகளை மிகவும் இயற்கையாக உடைத்துத் தின்றது. ஆண் சிம்பன்ஸிக்கள் தன் மூர்க்கத்தனத்தையும், ஆண் ஆதிக்கத்தன்மையின் மூலமாகத்தான் பெண் சிம்பன்ஸிக்களை வெற்றி கொள்ளும் என்று நினைத்திருந்தனர் போட்டி அமைப்பாளர்கள். ஆனால், அவர்கள் நினைத்ததற்கு மாறாக, ஆண் சிம்பன்ஸிகளோ பெண் சிம்பன்ஸிகளோடு போட்டிகளை தவிர்த்து, இனக்கவர்ச்சி மூலம் வெற்றிகொள்ளும் உத்திகளையே கையாளத்துடித்தது. இது வழக்கமாக ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் என்னும் மனித இயல்புகளை நிரூபிப்பதாகவுள்ளது என்றும், ஆனால், இந்த ஒருசில போட்டிகளின் மூலம் மனித இனங்களின் திறமைகளையும், ஜீன்களின் பண்புகளைப் பற்றியும் இறுதியான முடிவு எட்டிவிடமுடியாது என்று இப்போட்டியை ஏற்பாடு செய்திருந்த ஸ்டீவன் என்பவர் தெரிவித்துள்ளார்.
பூமியின் மிக பழமையான தொல்லுயிர் படிவம் ஆஸ்திரேலியாவில் உள்ளதாக ஆய்வில் தகவல்


ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர் டேவிட் வாசி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி சுமார் 3.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த பாக்டீரியாவின் தொல்லுயிர் படிவம் ஆஸ்திரேலியா நாட்டின் பில்பரா பகுதியில் அமைந்த ஸ்ட்ரெல்லி நதிக்கரையில் கிடைத்துள்ளது. இதுவே உலகின் மிக தொன்மை வாய்ந்த உயிரி படிவம் ஆகும். சாதாரண கண்களால் பார்க்க இயலாத இந்த பாக்டீரிய படிவத்தை மைக்ரோஸ்கோப் வழியே எளிதாக கண்டுணர முடியும். இது பற்றி டேவிட் கூறும் பொழுது, 3.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் கடும் வெப்பமான, உயிரினங்கள் வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜன் இல்லாத சூழல் காணப்பட்டது. அத்தகைய நிலையில் ஏதேனும் ஒரு வழியில் உயிரிகள் வாழ்ந்தாக வேண்டும். அப்பொழுது எரிமலை வெடித்து வெளிப்பட்ட குழம்பில் அதிகம் நிறைந்த கந்தக பொருள்களை இத்தகைய பாக்டீரியாக்கள் சுவாசித்து வாழ்ந்திருக்க வேண்டும் என கூறுகிறார்.
உலகிலேயே மிக நீளமான பெரிஸ்கோப்பு கல்பாக்கத்தில் அமைப்பு

தமிழ் நாட்டின் கல்பாக்கத்திலுள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி நிலையத்தில் உலகின் மிக நீளமான, அதாவது 10 மீட்டர் நீளம் கொண்ட பெரிஸ்கோப்பு ஒன்று ரூபாய் 4 கோடி மதிப்பில் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் இயக்கி வைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆய்வு மையத்தில் அதிக எண்ணிக்கையில் ரியாக்டர்கள் இயங்கி வருகின்றன. இந்த ரியாக்டர்களின் பராமரிப்புப்பணிகளை பார்வையிட, ரிமோட் கண்ட்ரோல் மூலமாக இயங்கும், இந்த பெரிஸ்கோப்புகள் பயன்படும் என தெரிய வருகிறது. அணுவை பிளந்து, வெப்பத்தை உருவாக்கி, நீராவியை தயார் செய்யும் அனைத்து பணிகளையும் செய்பவவைதான் இந்த ரியாக்டர்கள். இந்த ரியாகடர்களின் பராமறிப்பு பணியை கண்களால் நேரடியாக பார்வையிட முடியாது. இதனை சாத்தியமாக்கவே இந்த பெரிஸ்கோப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
கடல் வாழ் உயிரினங்கள் எழுப்பும் ஒலி குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு

கடல் வாழ் உயிரினங்கள் கடலில் பிரயாணிக்கும் பொழுது தங்களுக்குள் தொடர்பு ஏற்படுத்தி கொள்வதற்கு சப்தத்தை எழுப்பும். உதாரணமாக, சில திமிங்கல வகைகள் முனங்குவது போலவும், கத்துவது போலவும் ஒலியெழுப்பி ஒன்றுடன் ஒன்று தொடர்பு ஏற்படுத்தி கொள்வது வழக்கம். கடல் பரப்பில் மனிதனின் தாக்கம் பல வருடங்களாக அதிகரித்துள்ள நிலையில், அதனால் கடல் வாழ் உயிரினங்களின் தகவல் தொடர்பில் ஏற்படும் பாதிப்பு குறித்து கடல் ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலமாக ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது, இது பற்றி வரும் ஆகஸ்ட் 30 மற்றும் செப்டம்பர் 01 ஆகிய தினங்களில் பாரிஸ் நகரில் அமைந்த யுனெஸ்கோ அமைப்பின் கலந்தாய்வு கூட்டத்தில் விரிவாக விவாதம் நடத்தப்படும் என ஐ.நா. கழகம் தெரிவித்துள்ளது. 21.8.2011 10.20 PM
தலைமுடிக்கு ஜெல் பயன்படுத்திய பழங்கால எகிப்தியர்கள்: ஆய்வில் தகவல்

இங்கிலாந்து நாட்டிலுள்ள மான்செஸ்டர் பல்கலைகழகத்தில் தொல்லியல் துறை நிபுணரான நடாலி மேக்கிரீஷ் என்பவர் தலைமையில் எகிப்து நாட்டின் மம்மிகள் பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அவர்களின் ஆய்விற்கு எடுத்து கொள்ளப்பட்ட 18 மம்மிகளில் பெரும்பாலானவை கிரேக்க மற்றும் ரோமானிய காலத்தின்படி 2,300 வருடங்களுக்கு முற்பட்டவை. அதில் மிக பழமையான மம்மியின் வயது 3,500 ஆகும். இந்த மம்மிகளில் ஆண், பெண் என்று 4 வயது முதல் 58 வயது வரையிலானவர்கள் அடங்குவர். மைக்ரோஸ்கோபி முறையில் ஒளி மற்றும் எலக்ட்ரான்களை பயன்படுத்தி ஆராய்ந்ததில் 9 மம்மிகளின் தலை முடியில் கொழுப்பு போன்ற பொருள் பூசப்பட்டு இருந்தது. ஆய்வில், அது பால்மிடிக் மற்றும் ஸ்டியரிக் வகையை சேர்ந்த கொழுப்பு அமிலங்கள் என தெரிய வந்தது. ஜெல் வடிவில் பயன்படுத்தப்பட்ட அவை எதிலிருந்து எடுக்கப்பட்டது என்பது சரிவர தெரியவில்லை. எனினும் தற்போது, எகிப்து நாட்டவர்கள் பழங்காலத்திலேயே தங்கள் தலைமுடியினை அழகாக பராமரித்து வந்துள்ளனர் என்பதும் மம்மிகள் உருவாக்கத்திலும் அந்நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது என்பதும் ஆய்வின் வழியாக தெரிய வந்துள்ளது. 21.8.2011 9.36 PM
ஜிப்பான்கள் தாவிக்குதிக்கும் ரகசியம்
குரங்குகள் பலவிதம். ஏப் இனத்தை சேர்ந்த ஜிப்பான் என்பது ஒரு வகை குரங்கு. இவற்றின் கைகள் வெள்ளையாக இருப்பதனால் இது வெள்ளைக்கை ஜிப்பான் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஜிப்பான்கள் தரையிலிருந்து மேலெழும்பி சுமார் 3 மீட்டர் உயரம் தாவிக்குதிக்கும் திறன் பெற்றது. மனிதர்களுக்கு உடம்பில் 11 சதவீதம் கைகளின் எடை. ஆனால், ஜிப்பான்களுக்கு இது 17 சதவீதமாம். எனவே, தங்களது பலம் வாய்ந்த கைகளை அசைத்து, வீசி ஒரு அசுர பலத்தை ஏற்படுத்தி இவை தாவிக்குதிக்கின்றன. அப்படி செய்யும் போது அவற்றின் உடல் எடையின் புவி மையம் கைகளுக்கு வந்து விடுகிறதாம். அதுவே இவை இவ்வளவு உயரம் தாவிக்குதிப்பதற்கு தேவையான சக்தியை தருகிறது என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள். ஃப்ளீ என்பது ஒரு வகையான ஒட்டுண்ணிகள். இவை 1.5 மில்லி மீட்டரிலிருந்து 3.3 மில்லி மீட்டர் நீளம் வரை வளரக்கூடியவை. ஆனால், ஆச்சரியமாக இவை தங்களது உடலின் நீளத்தை விட 200 மடங்கு தூரத்தை அதாவது, 18 செ மீ உயரத்தை அல்லது 33 செ மீ நீளத்தை, ஒரே தாவலில் தாவி விடும். மிக அதிக உயரம் துள்ளிக்குதிக்கும் உயிரினம் இது தான். பொதுவாக நீண்ட தூரம் தாவிக்குதிக்கும் பிற உயிரினங்கள் வெட்டுக்கிளி மற்றும் ஃப்ளீ. ஆனால், இவை தாவிக்குதிப்பதற்கும் இந்த ஜிப்பான்கள் தாவிக்குதிப்பதற்கும் நிறைய வித்தியாசமிருப்பதாக இவற்றை ஆராய்ந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 20.8.2011 10.15 AM
வெளவால்களை பற்றிய ஒரு ருசிகர ஆராய்ச்சி
வெளவால்கள் எவ்வாறு திசைகளை கண்டுபிடித்து பறக்கின்றன என்பதை கண்டறிய ஒரு ஜி.பி.எஸ். கருவியை ஜெருஸலம் பல்கலை கழக விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். தங்களது இலக்குகளை திறம்பட நிர்ணயம் செய்வதில் வீட்டுப்புறாக்களை விட பழ வெளவால்கள் திறமையானவை என இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
எகிப்திலுள்ள பழ வெளவால்கள், மலைகள் மற்றும் மக்கள் குடியிருப்புக்களில் தெரியும் வெளிச்சம் போன்றவற்றை அடையாளமாக வைத்தே வேறிடத்துக்கு செல்லவோ அல்லது மீண்டும் அதே இடத்துக்கு திரும்பி வரவோ செய்கின்றனவாம். வெளிச்சம் இல்லாத காலங்களில் அவை ஏதோ ஒரு உள்ளுணர்வின் அடிப்படையில் தங்களது இலக்குகளை மிக துல்லியமாக கணிக்கும் ஆற்றல் பெற்றவை என இந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
சில வெளவால்களின் மீது ஒரு ஜி.பி.எஸ் கருவியை இணைத்து அவற்றை ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து பறக்க விட்டார்கள். அவை சுமார் 25 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஒரு பழ மரத்திற்கு பறந்து சென்று மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்தன. அதிசயமாக, அதே போன்ற பழ மரங்கள் வெளவால்கள் பறந்து சென்ற வழியில் வெகு அருகில் இருந்தாலும் அவை தாங்கள் வழக்கமாக செல்லும் ஒரு குறிப்பிட்ட மரத்திற்கே சென்று வந்தது தெரிய வந்தது.
இன்னும் சுவாரசியமாக, பட்டினியாய் சிலவற்றையும் இறையெடுத்த சில வெளவால்களையும் தங்களது இருப்பிடத்தைவிட்டு வெகு தொலைவுக்கு கொண்டு சென்று பறக்க விட்ட போது, இறையெடுத்தவை தங்களது சரியான இருப்பிடத்துக்கும், பட்டினியாய் இருந்தவை வழக்கமாக செல்லும் பழ மரங்களுக்கு சென்று பின்னர் தங்களது இருப்பிடத்துக்கு திரும்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது. 19.8.2011 11.08 AM
டிராகன் விண்கலன் நவம்பர் மாதம் சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடம் செல்கிறது

விண்வெளியில் மிக பெரிய சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடம் அமையவுள்ளது. 1998 ல் தொடங்கப்பட்ட இந்த ஆய்வுக்கூட அமைப்புப்பணி 2012 முடியும் என திட்டமிடப்பட்டுள்ளது. தாவரம் மற்றும் மனிதர்கள் குறித்த ஆய்வுகளும் வானியல், புவியியல் குறித்த ஆய்வுகளும் நடத்துவதற்காக பயன்பட இருக்கிற இந்த ஆய்வுக்கூடம் 2028 ஆம் ஆண்டு வரை செயல்படத்தக்க வகையில் அமையவுள்ளது. இதன் அமைப்புப்பணிகளுக்கு தேவையான விண்கலங்களை இதுவரை அமெரிக்காவின் நாசா நிறுவனம் தயாரித்து வழங்கி வந்தது. நாசா தனது விண்கல தயாரிப்புப்பணிகளை தற்போது நிறுத்திக்கொண்டதனால், இந்த இன்டர்நேஷனல் விண்வெளி ஆய்வுக்கூடம் அமைக்கும் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை சரி செய்ய ஸ்பேஸ் எக்ஸ் என்னும் தனியார் நிறுவனம் விண்கலங்களை தயாரித்து வழங்க முன் வந்துள்ளது. இதற்கான அனுமதி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. விண்வெளி ஆய்வுப்பணியில் இது போன்ற ஒரு தனியார் நிறுவனம் பங்கு பெறுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. ஸ்பேஸ் எக்ஸ்ஸின் முதல் தயாரிப்பான டிராகன் விண்கலன் எதிர் வரும் நவம்பர் மாதம் விண்வெளியில் செலுத்தப்பட்டு அங்கு ஆய்வுக்கூடத்துடன் இணைக்கப்படும் என தெரிகிறது.
விண்வெளியில் ஓட்டல் அமைக்க ரஷ்யா திட்டம்
விண்வெளியில் செயற்கை முறையில் ஓட்டல் ஒன்றை நிர்மாணிக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது. பூமியிலிருந்து 217 மைல்கள் உயரே அமையவிருக்கும் இந்த ஓட்டலில் ஒரு நேரத்தில் 7 பேர் தங்கும் வகையில் நான்கு அறைகள் மற்றும் பூமி கீழே சுற்றுவதை எளிதாக பார்க்கும் வகையில் அமைந்த பெரிய ஜன்னல்கள் ஆகியவை இடம் பெறும். ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் உதவியுடன் 2 நாட்கள் பயணம் செய்து இதனை அடையலாம். விண்வெளி சுற்றுலா செல்ல விரும்பும் பணக்காரர்கள், விண்வெளி ஆராய்ச்சி மேற்கொள்வோர் ஆகியோருக்கு ஏற்ற வகையில் உருவாகும் இதில் 5 நாட்கள் தங்குவதற்கு 1 லட்சம் முதல் 5 லட்சம் பவுண்டுகள் வரை செலவாகும். மேலும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிபுரியும் விண்வெளி வீரர்கள் அவசர காலத்தில் பூமிக்கு திரும்புவதற்கு பதிலாக தங்குமிடமாகவும் இந்த ஓட்டல் இருக்கும். இதனை ஆர்பிடல் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் உருவாக்குகிறது. வரும் 2016-ம் ஆண்டிற்குள் இதன் பணிகள் முடிவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 17.8.2011 5.18 PM
போக்குவரத்து பிரச்சினைகளை தீர்க்க புதியவகை ரோபோக்கள்
அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலை கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கிய ரோபோ ஒன்று மனிதர்களைப்போலவே நடக்கவும் ஓடவும் செய்கிறது. மேபெல் என்று பெயரிடப்பட்ட இந்த ரோபோ மணிக்கு 6.8 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் திறன் பெற்றது.

ஜெஸ்ஸி க்ரிஸ்ஸில் மற்றும் ஜோனதன் ஹர்ஸ்ட் என்ற இருவர் இந்த ரோபோவை வடிவமத்தவர்கள். அதன் பின், கவுசில் ஸ்ரீநாத் என்ற இந்திய முதுகலை பட்டதாரியும் ஹேவொன் பார்க் என்ற மற்றொரு விஞ்ஞானியும் இணைந்து மேபெலுக்கு ஓடக்கற்றுக்கொடுத்தார்கள். மேபெல் ஒரு பெண்ணைப்போல் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் உடற்கூறு மற்றும் அமைப்பை ஒத்துள்ள மேபெல்லின் கால்கள் ஓடுவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. இந்த ரோபோவின் மீதான அடுத்தகட்ட ஆராய்ச்சியில், நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் இருப்பவர்களை எழுந்து நடக்க வைக்கும் தொழில் நுட்பத்தை கண்டுபிடிப்பது தான் என இதனை வடிவமைத்தவர்கள் கூறுகின்றனர். அதே நேரம், ஒரு சூப்பர் மேனைப்போல் விண்ணில் தாவிப்பறக்கும் ஆற்றல் கொண்ட ரோபோக்களை வடிவமைத்து ஆபத்துக்காலங்களில் மீட்புப்பணிகளுக்கு பயன்படுத்தவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

மேபெல்லை அடுத்து இதே வரிசையில் உருவாகவுள்ள ரோபோக்கள் விலங்குகளைப்போல் விரைந்து ஓடும் என்று கூறப்படுகிறது. இந்த வகை ரோபோக்கள் போக்கு வரத்து பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக அமையுமென்று கவுசில் ஸ்ரீநாத் கூறியுள்ளார். இந்த ரோபோக்களின் மீது மனிதர்கள் குதிரை சவாரி செய்வது போல் பயணம் செல்லலாம். அதிக பொருட்செலவில் சாலைகள் அமைக்கவோ வாகனங்களை தயாரிக்கவோ தேவையில்லை என்பதனால் போக்கு வரத்து பிரச்சனை சுலபமாக தீர்க்கப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
விண்வெளியில் உயரங்களை துல்லியமாக கணிக்க இயலாத மனித மூளை
வரை படங்களையும் இடங்களையும் பூமியில் சரியாக புரிந்து கொள்ளும் மனிதன், விண்வெளியில் ஓரிடத்தின் லட்டிட்யூட் மற்றும் லாங்கிடியூட் போன்றவற்றை சரியாக புரிந்துகொள்வதில்லையாம். இது விண்வெளி வீரர்களுக்கு பிரச்சனை தரும் விஷயம் என்பது அனுபவ உண்மை. லண்டன் யுனிவர்ஸிடி காலேஜை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதனை ஒரு ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர். மனித மூளையில் ஹிப்போகேம்பஸ் எனப்படும் செல்கள் உள்ளன. ஒரு வரைபடத்தை புரிந்து கொள்ளும் திறனை மனிதனுக்கு தருகிற இந்த செல்களே மேற் சொன்ன ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. உயரமான கம்பம் ஒன்றில் ஒரு எலியை ஏற வைத்து, அது எவ்வளவு உயரத்தில் நிற்கிறது என்பதை கூறும்படி ஆராய்ச்சியில் பங்கு பெற்றவ்ர்களிடம் கேட்கப்பட்டது. அவர்களால் அந்த உயரத்தை உத்தேசமாகக்கூட கணிக்க முடியவில்லை என்பது தெரியவந்தது. விண்வெளியில் தட்டையான பகுதிகளை சரியாக கணிக்க முடிகிற மனித மூளையினால் முப்பரிமாணம் கொண்ட உயரத்தை சரிவர திட்டமிடமுடியவில்லை என்பது தான் இவர்களது முடிவு.
துணைக்கோள் இல்லாவிட்டாலும் கிரகங்களுக்கு பாதிப்பில்லை
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், பூமி அதன் அச்சில் உள்ள நிலைப்பாடு குறித்து இதாஹோ பல்கலைகழகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், பூமிக்கு துணைக்கோள் இல்லாத நிலையிலும் உயிரினங்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதில்லை என தெரிய வந்துள்ளது. மேலும் மற்ற கோள்களுக்கும் துணைக்கோள் என்பது அவசியமில்லை என்றும் அதனால் கோள்களின் நிலைத்தன்மையில் பாதிப்பு ஏற்படாது என்றும் அது தெரிவிக்கின்றது. இதுவரையில், துணைக்கோள் இல்லையெனில் பூமி தன் அச்சிலிருந்து சிறிது விலக நேரிடும் என்றும், அதனால் சூரிய ஒளி துருவ பகுதிகளில் விழுந்து பருவகால நிலைகளில் பெரிய மாற்றம் நிகழும் எனவும் எனவே உயிரினங்களின் வாழ்க்கை முறை பாதிக்கப்படும் என்றும் அறிவியலாளர்கள் நம்பி வந்துள்ளனர். தற்போது, இந்த ஆராய்ச்சி முடிவால் பூமி அதனுடைய துணைக்கோள் இன்றியும் தன் அச்சில் சீராக இயங்கும் என தெரிய வந்துள்ளது.
ஒருவருக்கு அறிவாற்றல் எங்கிருந்து வருகிறது?
வளரும் விதமும் கல்வியறிவும் தான் ஒருவரது அறிவாற்றலுக்கு காரணம் என்று சொல்லப்பட்டாலும், சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அறிவுத்திறனில் பாதி பாரம்பரியமாக பெற்றோரிடமிருந்தே வருகின்றது என்று கூறுகிறது. இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தை சேர்ந்த ஏறத்தாழ 3500 பேரை இந்த ஆய்வுக்குட்படுத்தி ஒருவரது அறிவுத்திறன் அல்லது அறிவுத்திறனின்மை இரண்டுமே பெற்றோரிடமிருந்தே வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே போல் கிஸ்டலைஸ்டு இண்டெலிஜென்ஸ் என்று சொல்லப்படும் ஒருவரது தனித்திறன்களுக்கு காரணமாய் அமைவது அவரது ஜீன்களே! ஒரு சிக்கலான சூழ்நிலையில் பகுத்தாயும் திறன் மற்றும் கற்பனைக்கப்பாற்பட்ட விஷயங்களை புரிந்து கொள்ளும் திறன் இவையெல்லாம் ஒருவரது DNA வின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை அறிவுக்கு ஃப்ளூய்ட் டைப் இண்டெல்லிஜென்ஸ் என்று பெயர். இந்த ஆய்வினை மேற்கொண்டது ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து இன்ஸ்டிடியுட் ஆஃப் மெடிக்கல் ரிஸர்ச் என்ற அமைப்பு.
சிஸ்டிக் பைப்ரோசிஸ் வியாதிக்கு விரைவில் புதிய மருந்து: எப்.டி.ஏ. பரிசீலனை

சுவாசம் மற்றும் செரிமான உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும் வியாதி சிஸ்டிக் பைப்ரோசிஸ் என அழைக்கப்படுகிறது. மரபு கோளாறினால் ஏற்படும் இந்த வியாதிக்கு காரணமான மரபணு கடந்த 1989ம் ஆண்டு ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டது. தற்பொழுது, நோயினை தீர்க்க நம்பிக்கை ஏற்படும் வகையில் அமைந்த இந்த ஆய்வின் அடிப்படையில், நோய்க்கான மருந்தினை பற்றி இந்திய உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு கழகம் (எப்.டி.ஏ.) இந்த வருடத்திற்குள் இறுதி முடிவெடுக்கும் என தெரிகிறது.
எச்.ஐ.வி. பாதிப்பை கண்டறிய புதிய கருவி

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் அமைந்துள்ள கொலம்பிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எச்.ஐ.வி. பாதிப்பை கண்டறிவதற்காக பிளாஸ்டிக்கால் ஆன கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இக்கருவி 100 சதவீதம் துல்லியமாக செயல்படுவதுடன் 15 நிமிடங்களில் முடிவை தெரிவித்து விடுகிறது. இதற்காகும் செலவும் (ஒரு டாலர்) மிக குறைவாகும். கிரெடிட் கார்டு வடிவிலான இந்த கருவி அதிக வரவேற்பை பெறும் என தெரிகிறது.
வியாழன் கோளை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட நாசா விண்கலம் ஜுனோ

அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் புளோரிடா மாகாணத்தில் கேப் கேனவெரல் என்ற இடத்திலிருந்து ஜுனோ என்ற பெயரிடப்பட்ட விண்கலம் ஒன்றை வியாழன் கிரகத்தை பற்றி ஆய்வு மேற்கொள்ள அனுப்பியுள்ளனர். இது மணிக்கு சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் மைல் வேகத்தில் பயணித்து கோள்களின் அரசன் என்றழைக்கப்படும் வியாழனின் மையப்பகுதிக்கு சென்றடையும். பின்னர் அதன் உட்புற பகுதிகள், வியாழனின் வளிமண்டலம் மற்றும் அதன் காந்தப்புல வலிமை ஆகியவை பற்றி ஆய்வு மேற்கொள்ளும். இந்த ஆய்வின் தலைவர் ஸ்காட் போல்டன் கூறும் போது, சூரிய குடும்பம் உருவானது எவ்வாறு என்பது உள்பட பல ரகசியங்கள் வியாழன் கோளில் மறைந்துள்ளன. எனவே இந்த ஆராய்ச்சியின் மூலம் பல அரிய தகவல்கள் கிடைக்கப்பெறும் என தெரிவித்தார். இந்த ஆய்வுக்கு 1.1 பில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது. இந்த விண்கலத்துக்கு ஜுனோ என்று பெயரிடப்பட்டது சற்று சுவாரசியமானது. ரோம பெண் கடவுளான ஜுனோ வியாழனின் மனைவி ஆவார். இவர் வியாழனை பற்றி உளவு பார்த்ததாக கூறப்படுவதுண்டு. அதனடிப்படையில் இந்த விண்கலத்திற்கு ஜுனோ என பெயர் வைத்துள்ளனர்.
விரல்ரேகை மூலம் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் புதியமுறை
குற்றப்புலனாய்வில் முக்கிய பங்கு வகிப்பது குற்றவாளியின் கைரேகை. புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில் நுட்பம் ஒன்று கைரேகையை வைத்து குற்றவாளி குற்றத்தில் ஈடுபடுவதற்கு முன் போதை மருந்து உட்கொண்டிருந்தாலும், வெடி பொருட்களை கையாண்டிருந்தாலும் அதனை காட்டிக்கொடுத்து விடுகிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷீஃபீல்டு ஹாலம் பல்கலைகழக விஞ்ஞானிகள் இதனை கண்டுபிடித்துள்ளனர். குற்றவாளியின் பழக்க வழக்கங்கள் மற்றும் செயல்பாடுகளை துல்லியமாக காட்டிக்கொடுத்துவிடுகிறது இந்த புதிய கைரேகை ஆய்வு. இன்னும் மூன்றாண்டுகளுக்குள் அறிமுகப்படுத்தப் படவுள்ள இந்த கண்டுபிடிப்பு குற்றப்புலனாய்வில் பெரிய மாற்றங்களை கொண்டு வரும் என்று கூறப்படுகிறது. இதுவரையிலும் ரேகையிலுள்ள கோடுகளை குற்றவாளிகளின் ரேகையுடன் ஒப்பிட்டு பார்ப்பது வழக்கம். விரல்களால் தொடும் பொருட்களின் நுண்ணிய துகள்கள் விரலில் ஒட்டிக்கொள்ளுமாம். அது மட்டுமல்லாமல், உடலில் சுரக்கும் திரவங்கள் கூட விரல்களில் தங்கி விடுவதுண்டாம். எனவே, ஒருவரது விரல் ரேகையிலிருந்து அவர் என்னென்ன பொருட்களை தொட்டிருந்தார் என்பது முதல் அவரது உடல் வெளியிட்ட திரவங்கள் வரை அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும் என்கிறது இந்த ஆய்வு.
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான சான்று: நாசா கண்டுபிடிப்பு
பல ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா? என்று நாசா விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர். தற்போது செவ்வாய் கிரகத்தில் உவர்ப்புத் தன்மை கொண்ட தண்ணீர் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் வெப்பமான பருவத்தில் சிறிதளவில் தண்ணீர் ஆங்காங்கே தென்படுகிறது. இது உப்புத்தன்மை கொண்ட தண்ணீராக இருப்பதால் ஆவியாகி மறைந்து போகாமல் தேங்கி நிற்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன என்றும், பனிக்கட்டி நிலையை விட திரவவடிவில் இருப்பது உயிர்களின் வாழ்வாதாரத்திற்கு மிக முக்கிய அம்சமாக கருதப்படுகிறது என்றும் நாசா ஆராய்ச்சி மையத்தின் குழுவில் உள்ள நாசா விஞ்ஞானி கிறிஸ்டன்சென் கூறியுள்ளார்.
மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்கு இரு நிலவுகள்: ஆய்வாளர்கள் கருத்து

சூரிய மண்டலத்தில் உள்ள பூமியினை சுற்றி துணைக்கோளாக நிலவு சுற்றி வருகிறது. ஆனால் கலிபோர்னிய பல்கலைகழக ஆய்வாளர்களின் தகவல்படி, பூமிக்கு இரு நிலவுகள் இருந்துள்ளன என தெரிய வருகிறது. அவர்களது கருத்தின்படி, பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரக அளவில் ஒரு பருப்பொருளானது பூமியின் மீது மோதி பல சிதைவுகளாக சிதறி போனது. பின் ஈர்ப்பு விசையின் காரணமாக சிதைவுகள் இணைந்து நிலவு மற்றும் அதை விட சிறிய மற்றொரு நிலவு தோன்றியுள்ளது. இவை சுற்று வட்ட பாதையில் பயணித்த பொழுது ஒன்றுடன் ஒன்று மோதல் நடைபெற்றுள்ளது. மெதுவாக நடைபெற்ற அந்த மோதலால் தற்போதுள்ள நிலவில் பெரிய பள்ளங்கள் ஏதும் காணப்படவில்லை. ஆனால் மலை முகடுகள் போன்ற பகுதிகள் ஏற்பட்டுள்ளன என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நோயாளிகளை தூக்கி செல்ல உதவும் புதிய ரோபோ: ஜப்பானில் கண்டுபிடிப்பு

தொழில்நுட்ப துறையில் மிக வேகமாக முன்னேறி வரும் ஜப்பான் சமீபத்தில் புதிய வகை ரோபோ ஒன்றை தயாரித்துள்ளது. ரிபா2 என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ ரப்பர் சென்சார்கள், அனைத்து பக்கங்களிலும் இயங்க சக்கரங்கள் மற்றும் ஸ்பிரிங்குகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. கட்டளைகளின் அடிப்படையில் செயல்படும் இது அதிகபட்சமாக 80 கிலோ கிராம் எடையுள்ள மனிதர்களை தூக்கும் திறன் கொண்டது. பெரும்பாலும் படுத்த நிலையில் இருக்கும் நோயாளிகளை சக்கர நாற்காலி மற்றும் படுக்கைக்கு தூக்கி செல்வதற்கு பயன்படுகிறது. மனிதர்களை மென்மையாக கையாளும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
வெஸ்டா எரிகல்லை ஆய்வு செய்யும் டான் விண்கலம்
அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2007ம் ஆண்டு டான் என்ற விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பினர். அது எரிகல் பற்றிய ஆய்வில் இதுவரை சிரீஸ் மற்றும் வெஸ்டா ஆகியவற்றை ஆராய்ந்துள்ளது. பூமியிலிருந்து 117 மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ள வெஸ்டாவின் செயல்பாடுகள் தற்போது புகைப்படம் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 500 புகைப்படங்களை டான் எடுத்து தள்ளியுள்ளது. இந்த புகைப்படங்களில் வெஸ்டா எரிகல்லில் உள்ள பனி மனிதன் போன்று காணப்படும் குழிகள் உட்பட 3 பெரிய பள்ளங்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
மனித மூளை பரிணாம வளர்ச்சியின் உச்சத்தை அடைந்து விட்டது: ஆராய்ச்சியில் முடிவு

இங்கிலாந்து நாட்டில் அமைந்துள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மனோதத்துவ பேராசிரியர் எட் புல்மோர் மனித மூளையின் வளர்ச்சி பற்றி ஆய்வு மேற்கொண்டார். அதில், மனிதன் தனது மூளையின் ஆற்றலால் விண்வெளிக்கு விண்கலங்கள் அனுப்புதல், கணினி செயல்பாடு, செயற்கை உடல் உறுப்புகள் பயன்பாடு என பல்வேறு ஆச்சரியமூட்டும் செயல்களை செய்து வருகிறான். எனினும் அதற்கு துணைபுரியும் மூளையின் பரிணாம வளர்ச்சியில் மேலும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என அவர் கூறுகிறார். தொடர்ந்து அவர் கூறுகையில், மனிதன் எடுத்து கொள்ளும் ஆற்றலில் பெரும்பங்கு மூளைக்கே அதிகமாக செலவிடப்படுகிறது. அதிலும், பின்னி பிணைந்து நெருக்கமான நரம்பு மண்டலங்களை கொண்ட மூளையானது மிக விரைவாக கட்டளைகளை உடனுக்குடன் உறுப்புகளுக்கு அனுப்புகிறது. அத்தகையோரே சிறந்த அறிவாளிகளாக உள்ளனர். இந்நிலையில் மூளை மேலும் அதிக ஆற்றல் பெற்று செயல்படுவதற்கு வாய்ப்பில்லை எனவும் அதன் பரிணாம வளர்ச்சியானது உச்சத்தை அடைந்து விட்டது என்றும் தெரிவிக்கின்றார்.
டி.கே.7 எரிகல்லால் பூமிக்கு ஆபத்து இல்லை: நாசா
அமெரிக்காவை சேர்ந்த நாசா அறிவியலாளர்கள் கடந்த 2009-ம் ஆண்டு வைஸ் என்ற தொலைநோக்கியை செயற்கைகோள் உதவியுடன் விண்வெளிக்கு அனுப்பினர். அது பூமியை சுற்றிலும் இயங்கும் பல்வேறு நடவடிக்கைகளை பற்றி ஆராய்ந்து வருவதோடு எரிகற்கள் மற்றும் நட்சத்திரங்கள் போன்றவற்றின் செயல்பாடுகளையும் அறிந்து தகவல்களை அறிவியலாளர்களுக்கு அனுப்பி வருகிறது. ஏறக்குறைய கிடைத்த 500 வகையான தகவல்களில் 123 அறிவியலுக்கு புதியவை. இதில் 2010 டி.கே.7 என்ற எரிகல்லும் அடங்கும். சுமார் 200 முதல் 300 மீட்டர்கள் அகலம் கொண்ட இந்த எரிகல்லானது டிராஜன் எரிகல் எனறும் அழைக்கப்படுகிறது. தற்போது பூமியிலிருந்து 80 மில்லியன் கி.மீ. தொலைவில் சுற்றி வரும் இதனால் பூமிக்கு ஆபத்து இல்லை என்றும் இன்னும் 10 ஆயிரம் வருடங்களுக்கு தனது பாதையில் நிலையாக சுற்றி வரும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அணு பொருள் பற்றிய ஹிக்சின் கோட்பாட்டிற்கு அடுத்த வருட இறுதிக்குள் தீர்வு

ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ். இவர் கடந்த 1964-ம் ஆண்டு, இயற்பியலின் ஸ்டாண்டர்டு மாடல் என்ற பகுதியை அடிப்படையாக கொண்டு ஓர் அணுவிற்கு நிறையை தரும் கண்ணுக்கு புலப்படாத பொருள் பற்றி ஆய்வு மேற்கொண்டார். அந்த பொருள் அறிவியல் உலகில் கடவுள் பொருள் (காட் பார்டிகிள்) என அழைக்கப்படுகிறது. இது தொடர்பாக அவர் வெளியிட்ட தியரியை, செய்முறை விளக்கத்தின்படி செயல்படுத்திட கடந்த 2008ல் சோதனை நடத்தப்பட்டது. இதற்காக பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய இரு நாடுகளுக்கிடையே பூமியில் 300 அடி ஆழத்தில், அணு துகள்களை இரு கற்றைகளாக ஒளியின் வேகத்திற்கு ஈடாக அதிக சக்தி வாய்ந்த காந்தங்களின் வழியே பாய்ச்சினர். பின்னர் அவை ஒன்றுடன் ஒன்று மோதச்செய்யப்பட்டன. ஆனால் இச்சோதனையில் ஹீலியம் கசிவு மற்றும் பிற காரணங்களால் ஆய்வு தடைபட்டது. கடந்த சில வருடங்களாக தொடர்ந்த முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. தற்போது, ஐரோப்பிய அணு ஆராய்ச்சி அமைப்பின் இயக்குநர் ரால்ப் & டையடர் ஹியூர், "இது பற்றி அறிவியலாளர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான தீர்வினை நெருங்கியுள்ளோம். அடுத்த வருட இறுதிக்குள் ஹிக்சின் தியரிக்கு சரியான விடை கிடைத்து விடும் என்றார். இதனால் அண்டத்தில் நடைபெறும் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் விண்வெளியின் கருப்பொருள் ஆகியவற்றுக்கு விளக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
11 வகை பதார்த்தங்கள்: சமையலறையில் புதிய வரவு சூப்பர்செப்
அறிவியல் கண்டுபிடிப்புகளின் பயனாக மாவு அரைப்பதற்கு, துணி துவைப்பதற்கு என பல வேலைகளை பகிர்ந்து கொள்வதற்கு இயந்திரங்கள் வந்து விட்டன. தற்போது சமையலறைக்கு வந்துள்ள புதிய வரவு சூப்பர்செப். வறுத்தல், கொதிக்க வைத்தல், வேக வைத்தல் என பல வேலைகளை செய்யும் இந்த நவீன கருவி ஏறத்தாழ 11 வகை உணவு பதார்த்தங்களை தயாரிக்கிறது. தேவையான சமைக்கும் பொருள்களை அதற்கென்று உள்ள பாத்திரத்தில் போட்டு விட்டு பட்டனை தட்டி விட்டால் போதும். சுமார் 45 முதல் 50 நிமிடங்களில் சுவையான உணவு தயாராகி விடும். இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக 24 மணி நேரங்களுக்கு பின் சமையல் செய்ய வேண்டியதை முன்கூட்டியே புரோகிராம் செய்யும் வசதி உள்ளது. மேலும் உணவு தயாரானவுடன் அதனை வெளியே எடுக்காமல் விட்டு விட்டாலும் பொறுப்பாக நீண்ட நேரம் உணவை சூடாக வைத்து கொள்ளும் பணியை மேற்கொள்கிறது. சிறிய கிண்ணம், நீரை சூடாக்க பாத்திரம் மற்றும் சமையல் புத்தகம் ஆகியவற்றுடன் விற்பனைக்கு வரும் இதன் சிறப்பம்சங்களை பட்டியலிட்டால், தேவையல்லாத இடத்தை அடைக்கும் அதிகப்படியான பாத்திரங்களை சமையலறையில் அடுக்க வேண்டாம். சமைத்து முடிக்கும் வரை அங்கேயே இருக்க வேண்டாம். மேலும் இதன் வடிவமைப்பு எங்கும் கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
ஆண்களின் மலட்டு தன்மைக்கு காரணமான புரோட்டின்
ஆண்களின் விந்தணுவை கவசம் போல் காத்து வருகிறது ஒருவிதமான புரோட்டீன். இதற்கு DEFB126 என பெயர். இந்த வகை புரோட்டீன் தான் விந்தணு பெண்களின் கரு முட்டையை சரியாக சென்று சேர்வதையும் உறுதிப்படுத்துகிறது. இந்த புரோட்டீனின் செயல்பாடுகள் குறைந்து போவது ஆண் மலட்டுத்தன்மைக்கான பல காரணங்களுள் ஒன்று என அமெரிக்காவின் யூ சி டேவிள் பொடேகா மரைன் லாபரட்டரீஸ் மற்றும் சுற்று சூழல் சுகாதார மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வில், ஆண்களில் 25 சதவீதம் பேருக்கு இந்த புரோட்டின் குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளது.
மனிதனின் தோற்றம் குறித்து ஆராய்ச்சியில் புதிய தகவல்
விலங்குகளிலிருந்து மாறுபட்டு, மனிதன் எப்போது தரையிலிருந்து கைகளை தூக்கி எழுந்து, நிமிர்ந்து கால்களை ஊன்றி நிற்கவும், நடக்கவும் ஆரம்பித்தான்? இதுவரையிலும் கிடைத்த ஆதாரங்களின்படி சுமார் 1.9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு என்பதுதான் நாமறிந்த தகவல். ஆனால் 3.7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே கால் தடம் பதித்த மனிதன் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றது. தான்சேனியாவிலுள்ள லேடோலி என்னுமிடத்தில் பாறைப்படிமங்களில் 11 மனித கால் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கால் தடங்கள் சிம்பன்சிக்கள், உரங்க்-உட்டான்கள் மற்றும் கொரில்லாக்களின் பாத அமைப்பிலிருந்து வேறுபடுகின்றன. இதற்கு முன்பு இதே போல் காணப்பட்ட காலடி சுவடுகள் ஒன்றே ஒன்றாக இருந்ததனால் அவற்றை ஒப்பிட்டுப்பார்ப்பது இயலாமல் போயிற்று. ஆனால், தற்போது கிடைத்துள்ள 11 சுவடுகளினால் ஒப்பிட்டுப்பார்ப்பது சுலபமாகி இருக்கிறது. இன்றைய நாகரீக மனிதனுக்கு இதுவே முன்னோடி என்று கருதப்படுகிறது.
ஆதிமனிதன் இரண்டே பிரிவு தான் என்பது நாம் அறிந்தது. ஒன்று ஆப்பிரிக்காவை மையமாக கொண்டது. மற்றொன்று நியாண்டர்தாலை ஆதாரமாகக்கொண்டது. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட ஆதி மனிதனின் எக்ஸ் க்ரோமோசோம்கள் நியாண்டர்தால் மனிதனிடமிருந்து தோன்றியிருக்க வேண்டும் எனவும் அது நிச்சயமாக ஆப்பிரிக்காவை சேர்ந்த மனிதனுடையதல்ல என்றும் ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இந்த இரண்டு பிரிவும் ஒரு கால கட்டத்தில் ஒன்றுடன் ஒன்று கலந்திருக்க வேண்டுமெனவும் அந்த ஆய்வு மேலும் தெரிவிக்கிறது.
நியாண்டர்தால் மனிதனின் முன்னோர்கள் சுமார் 4 லட்சத்திலிருந்து 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி தற்போதைய பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் ரஸ்யா பகுதிகளில் கடந்த 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்திருக்க வேண்டும் என அந்த ஆய்வில் மேலும் தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் தற்போதைய நாகரீக மனிதன் சுமார் 50 ஆயிரத்திலிருந்து 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவிலிருந்துதான் வெளியேறியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. உடல் பலமும், பகுத்தறிவும் பெற்றிருந்த நியாண்டர்தால் மனிதனுக்கு தற்போதைய நாகரீக மனிதன் தோன்றிய இனத்தோடு தொடர்பு இருந்ததா? என்ற கேள்விக்கு ஆம் என்பது தான் பதில். நியாண்டர்தால் மனிதனும் தற்கால நாகரீக மனிதனும் ஒருவ்ருடன் ஒருவர் இரண்டற கலந்து போனவர்கள் தான் என்பதும் ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
பறக்கும் காருக்கு அமெரிக்க அரசு அனுமதி
அமெரிக்க அரசாங்கம் டெரபியூஜியா என்ற பெயர் கொண்ட பறக்கும் காருக்கு அனுமதி அளித்துள்ளது. இந்த கார் விமானம் போன்று வானில் பறக்கும். காராக பயணிக்கும் பொழுது இதன் உச்ச வேகம் மணிக்கு 65 மைல்கள் மற்றும் பறக்கும் பொழுது மணிக்கு 115 மைல்கள் வேகத்தில் செல்ல கூடியதாகும். இரண்டு பேர் அமர்ந்து பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த காரின் இரு இறக்கைகளும் சேர்ந்து அதன் நீளம் 28 அடி 6 இஞ்ச் ஆக உள்ளது. மேலும், இறக்கைகளை 15 வினாடிகளில் மடித்து பழைய நிலைக்கு கொண்டு வர இயலும். சுமார் 20 மணி நேர பயிற்சியில் இதனை சுலபமாக இயக்க முடியும். 5 வருடங்களில் பயன்பாட்டிற்கு வரும் என கூறப்படும் அதே வேளையில் இதற்கு அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளிலும் அமோக வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுனாமி தாக்குதலை முன்கூட்டியே கண்டறிய புதிய முறை கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் மகேலா என்பவர் தலைமையில் சுனாமி தாக்குதல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பல்வேறு முடிவுகள் தெரிய வந்தன. கடந்த மார்ச் மாதம் ஜப்பான் நாட்டில் சுனாமி பேரலைகள் அதி பயங்கர தாக்குதல்களை நடத்தின. சுனாமி வருவதற்கு முன்பு பூமியிலிருந்து 250 கி.மீ. உயரத்தில் காற்று மண்டலத்தில் சில மாறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. வழக்கமாக சூரிய கதிர்கள் வாயு மண்டலத்தில் காற்று மூலக்கூறுகளை ஊடுருவி செல்லும் பொழுது உள்ள காற்றின் அடர்த்தியும், சுனாமியின் போது காற்றின் அடர்த்தியில் ஏற்படும் மாற்றமும் கண்டறியப்பட்டன. இதனை அறிவியலாளர்கள் வரைபடம் வழியே விளக்கியுள்ளனர். வரைபடத்திலுள்ள சிவப்பு நிற கோடுகள் சுனாமி தாக்குதலை குறிக்கிறது. எனவே, சுனாமி வருவதற்கு முன்பே காற்றில் ஏற்படும் இத்தகைய மாற்றத்தை கருத்தில் கொண்டு அதற்கேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பார்வை இல்லையா... இனி கவலை இல்லை
பார்வை குறைபாடு உடையவர்களுக்கான அபூர்வ கண்ணாடி ஒன்றை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது ஒரு அரிய கண்டுபிடிப்பு. இந்த கண்ணாடியின் பிரேமிலுள்ள ஸ்குருக்களே ஒரு விதமான காமிராக்களால் ஆனது. இந்த காமிராக்கள் ஒரு மொபைல் போன் அளவிலான சிறிய கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சிறிய கம்ப்யூட்டரை பாக்கெட்டிலேயே வைத்துக்கொள்ளலாம். இந்த கண்ணாடியின் முன் வரும் எவரையும் அல்லது எதையும் இந்த காமிராக்கள் படம் பிடித்து கம்ப்யூட்டருக்கு அனுப்புகிறது. கம்ப்யூட்டர் அதனுடன் இணைந்த கண்ணாடியின் உள்பக்கம் அமைந்துள்ள எல் ஈ டி க்களை ஒளிரச்செய்வதன் மூலம் கண்ணாடியை அணிந்திருக்கிறவருக்கு தனக்கு எதிரே வருபவரை அல்லது வருபவற்றை அறிவுறுத்துகிறது. இந்த கண்ணாடியை பயன்படுத்தி பஸ் நம்பர்கள், ரயில்வே அட்டவணை போன்றவற்றை தெரிந்து கொள்ளமுடியும் என்பது இதன் சிறப்பு. இந்த கண்ணாடியை பயன்படுத்துபவர்கள் ஏ டி ஏம் வசதியைக்கூட சிரமமின்றி பயன்படுத்த முடியுமென்று இதனை வடிவமைத்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 2014 ல் சந்தைக்கு வர இருக்கிற இந்த கண்ணாடி நிரந்தர பார்வை குறைபாடு உடையவர்களுக்கு மட்டுமல்ல முதுமை காரணமாக பார்வை குறைபாடடைந்தவர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும் என்று தெரியவருகிறது. இதனை குறைந்த விலைக்கு வழங்கவும் அதிக எடை இல்லாததாக செய்யவும் மேற்கொண்டு ஆராய்ச்சி நடந்து வருகிறது.
எரிகல் பாதிப்பை சந்திக்கும் அபாயம் கொண்ட 10 நாடுகள் பட்டியலில் இந்தியா
இங்கிலாந்து நாட்டில் அமைந்துள்ள சவுத்தாம்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிக் பெய்லி என்ற அறிவியலாளர் பூமியின் மக்கள் தொகை அதிகமுள்ள பகுதியை எரிகல் தாக்கும் அபாயம் உள்ளது என்று கூறுகிறார். எரிகல்லால் அதிகமாக பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலை தனது கண்டுபிடிப்பான நியோஇம்பாக்டர் என்ற சாப்ட்வேரின் உதவியுடன் வரிசைப்படுத்துகிறார். இதில் சீனா முதலிடத்தையும், இந்தோனேசியா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், இத்தாலி, பிரிட்டன், பிரேசில் மற்றும் நைஜீரியா ஆகியவை அடுத்தடுத்த இடங்களையும் பிடிக்கிறது. ஏறத்தாழ 65 மில்லியன் வருடங்களுக்கு முன்பு 10 மைல்கள் விட்டம் கொண்ட மணிக்கு 25 ஆயிரம் வேகத்தில், 100 மெகா டன்கள் விசையுடன் பூமியின் மீது எரிகல் ஒன்று மோதியதால் டைனோசர் இனம் அழிந்து போனது என்று கருதப்படுகிறது. வியாழன் கிரகத்தின் ஈர்ப்பு விசையால் தான் பூமியின் மீது மோத இருக்கும் பெரும்பாலான எரிகற்களின் ஆபத்து தவிர்க்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
170 ஆண்டுகள் பழமையான பீர் கண்டுபிடிப்பு
பால்டிக் கடல் பகுதியில் உள்ளது அலாண்ட் என்னும் தீவு. சுமார் 170 ஆண்டுகளுக்கு முன் இந்த தீவுக்கு அருகில் கப்பல் ஒன்று மூழ்கிப்போனது. உடைந்து போன கப்பலுக்குள் இருந்து உலகின் மிக பழமையான பீர் பாட்டில் ஒன்றை பின்லாந்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். துரதிர்ஷ்டவசமாக, கடல் நீர் பாட்டிலுக்குள் எப்படியோ புகுந்திருந்ததால் பீர் கலப்படமாகிப்போனது. தற்போது பீர் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களும், முறைகளுமே இந்த பழைய பீரிலும் காணப்பட்டாலும் ஈஸ்ட் பயன்படுத்தப்படவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வகை பீரை எப்படி தயார் செய்வது என்பது தெரியாமல் அவர்கள் குழப்பத்தில் உள்ளனர். 29.6.2011 2.46 PM
பூமியை நெருங்கும் விண்கல்
பூமியின் தென் முனையை நோக்கி மிக நெருங்கி வந்து கொண்டிருக்கும் விண்கல் ஒன்றை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். ஆபத்தான விண்கற்கள் ஏதேனும் பூமியை நெருங்குகிறதா என்பதை கண்காணிக்கும் மெக்சிகோவைச்சார்ந்த விண்வெளி ஆய்வு நிறுவனம் ஒன்று, கடந்த புதன் கிழமையன்று, ஒரு விஷேச தொலை நோக்கியின் மூலம் இதனை கண்டறிந்துள்ளது. 2011 MD என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல் வருகிற 27.06.2011 அன்று பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 11 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு நெருங்கி வருவதாகவும் அப்போது அது மிகவும் பிரகாசமாக தோன்றும் எனவும் தெரிகிறது. இந்த தகவலை இங்கிலாந்து விண்வெளி ஆய்வு மையம் ஒன்று உறுதி செய்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் கண்ணீர் துளி வடிவில் தீவுகள்
அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் பல்கலைகழக புவியியலாளர் லோர்னா மஸ்கர்டெல்லி என்பவர் மேற்கொண்ட ஆய்வில் செவ்வாய் கிரகத்தில் காணப்படும் கண்ணீர் துளி வடிவம் கொண்ட தீவுகள் அங்கே ஆழமான பகுதியில் நீர் இருந்ததற்கான ஆதாரத்தை தெரிவிப்பதாக தகவலளித்துள்ளார். கடந்த 2001ம் ஆண்டில் செவ்வாயில் ஆய்வு மேற்கொள்ள சென்ற ஒடிசி விண்கலம் அனுப்பிய புகைப்படங்களில் கால்வாய்கள் மற்றும் பள்ளத்தாக்குகள் போன்றவை காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இத்தீவுகளின் நீளம் 3 முதல் 30 மைல்கள் தொலைவு இருக்க கூடும் என்றும், சுமார் 1.5 முதல் 150 சதுர மைல்கள் பரப்பளவை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. செவ்வாய் கிரகத்தில் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நீர் தோன்றியிருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
உலகளவில் பல சமுத்திரங்கள் வற்றி விடும்: ஆய்வாளர்கள் கருத்து

சமுத்திரங்கள் பற்றி ஆய்வு மேற்கொள்ளும் சர்வதேச சமுத்திர நிபுணர்கள் குழு ஒன்று ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் கூடி உலகில் சமுத்திரங்களின் நிலை குறித்து தகவல் ஒன்றை வெளியிட்டனர். அதில், வளிமண்டலத்தில் அதிகரித்துள்ள கார்பன் டையாக்சைடு வாயுவால் சமுத்திரங்களின் வெப்பநிலை உயர்ந்து ஆல்காவின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. இதனால் ஆக்சிஜன் அளவு குறைந்து நீரானது அமில தன்மை மிக்கதாக மாறி பவள பாறைகளின் பெரும் பகுதி அடுத்த தலைமுறைகளில் முற்றிலும் மறைந்து போகும் அபாயம் உள்ளது. மேலும் மீன் பிடித்தல் அதிகரித்து வருவதால் குறிப்பிட்ட இன மீன்களை வருங்காலங்களில் பார்க்க முடியாத சூழல் ஏற்படும். இதனை தடுக்க கார்பன் வெளிப்பாடை சீர்செய்வதும், அதிகப்படியான மீன் பிடித்தலை குறைத்திடவும், கடலில் பாதுகாக்கப்பட்ட இடங்களை ஏற்படுத்தவும் மற்றும் சுற்றுபுற சீர்கேடுகளை களையவும் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். மாறி வரும் பருவ காலங்களால் சமுத்திரங்கள் வற்றி விடுவதென்பது கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளதாக வரலாறு கூறினாலும், தற்போது, எதிர்பார்க்கப்பட்டதை விட மிக விரைவில் இம்மாற்றம் வர கூடும் என்றும் எச்சரித்துள்ளனர்
பிரான்சு நாட்டின் அதி நவீன விமானத்தின் திட்ட வடிவம் வெளியீடு
லண்டன் நகரிலிருந்து டோக்கியோவிற்கு 2 மணி நேரங்களில் பயணம் செய்யும் வகையில் மேக் 4 என்ற பெயரிடப்பட்ட அதி நவீன விமானத்தை தயாரிப்பதற்கான திட்ட முன் வடிவை பிரான்சு நாட்டின் ஏர் பஸ் என்ற விமான நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த விமானத்தில் ஏறத்தாழ 100 பேர் வரை பயணம் செய்ய முடியும். ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் வாயுக்கள் கொண்ட கொள்கலன் மற்றும் ராக்கெட்டுகளுக்கு பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் என்ஜின்கள் ஆகியவை பயன்படுத்தப்படுவதால் அதிக சப்தம் ஏற்படாதவாறும், கழிவுகளாக நீர் மட்டுமே வெளியேறுவதும் இதன் சிறப்பம்சங்களாக அமைந்துள்ளன. மேலும் மிக வேகமாக பறப்பதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட இறக்கைகளும் மணிக்கு 3,125 மைல் வேகத்தில் பறக்கும் தன்மையும் கொண்ட இவ்விமானங்கள் வர்த்தக அடிப்படையில் செயல்பட இன்னும் 40 வருடங்கள் ஆகும் என்று திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
மனிதர்களை போன்று உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தேனீக்கள்

இங்கிலாந்து நாட்டிலுள்ள நியூகேசில் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மெலிசா பேட்சன் மற்றும் ஜெரி ரைட் ஆகியோர் தேனீக்களை பற்றி ஆராய்ந்ததில் அவை மனிதர்களை போன்று உணர்ச்சியை வெளிப்படுத்த கூடியவை என்று அறிந்தனர். பொதுவாக முதுகெலும்பற்ற வகையை சேர்ந்த பூச்சி இனமான தேனீக்கள் இதுவரையிலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்த தெரியாதவை என்றே கருதப்பட்டு வந்தன. இந்நிலையில் அவர்கள் பயிற்றுவித்த தேனீக்கள் வசித்த தேன் கூட்டின் மீது எதிராளிகள் தாக்குவது போன்று போலியான தாக்குதலை நடத்தினர். பின் அவற்றின் நடவடிக்கைகள் கவனிக்கப்பட்டன. மிக சிறிதளவே கொண்ட அவற்றின் மூளையில் அழுத்தத்தை தோற்றுவிக்கும் வேதிபொருள்களான டோபமைன், செரோடனின் மற்றும் ஆக்டோபமைன் ஆகியவற்றின் அளவுகள் மாறுபடுவதை கண்டறிந்தனர். இதனடிப்படையில் பார்க்கும் பொழுது தேனீக்களானது விலங்குகள் மற்றும் மனிதர்கள் போல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் தேனீக்களின் பிற உணர்வுகளையும் பற்றி அறிந்து கொள்ள ஆய்வானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சுவையான தேனீர் தயாரிப்பது எப்படி?: ஆய்வில் புது தகவல்
சுவையான தேனீர் தயாரிப்பது எப்படி என்று கண்டறிய விரும்பிய இங்கிலாந்து பால் உற்பத்தி நிறுவனம் ஒன்று நார்தம்ப்ரியா பல்கலை கழக விஞ்ஞானிகளை கேட்டுக்கொண்டது. சுமார் 180 மணி நேர ஆய்வுக்குப்பின் ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்தனர் விஞ்ஞானிகள். தேனீர் தயாரிப்பது ஒரு கலை என்றால் அதை சுவையானதாக தயாரிப்பது ஒரு விஞ்ஞானம் என்று கூறிய அவர்கள், இதற்கென ஒரு பார்முலாவையே உருவாக்கியுள்ளனர். அவர்களது ஆய்வின்படி, தயாரித்து 6 நிமிடங்களுக்குப்பின்னரே தேனீர் சுவை மிகுந்ததாக இருப்பதை கண்டறிந்துள்ளனர். தயார் செய்யப்பட்டு 6 நிமிடங்களில் அது 60 டிகிரி சென்டிகிரேட் வெப்ப நிலைக்கு வரும் போதுதான் அதன் சுவை அதிகரிப்பதாகவும் சரியாக 17 நிமிடம் 30 வினாடிகளில் அது 45 டிகிரி சென்டிகிரேட் வெப்ப நிலைக்கு வருவதால், தன் சுவையையும் மணத்தையும் இழக்க தொடங்குவதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும், தேனீர் தயாரிக்க 2 நிமிடங்களுக்கு மேல் எடுத்துக்கொள்ளக்கூடாதென்றும்; வெறும் 10 மில்லி பால் மட்டுமே சேர்த்துக்கொள்ளலாம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
தண்ணீரை வெளியிடும் நட்சத்திரம்: நெதர்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
எந்திர துப்பாக்கியிலிருந்து வெளியேறும் குண்டுகளின் வேகத்தைப்போல் 80 மடங்கு வேகத்தில் நீரை சிதற அடிக்கும் நட்சத்திரம் ஒன்றை நெதர்லாந்திலுள்ள லெய்டன் பல்கலை கழக விஞ்ஞானிகள், இன்ஃப்ராரெட் கதிர்களை பயன்படுத்தி கண்டுபிடித்துள்ளனர். பூமியிலிருந்து சுமார் 750 ஒளி ஆண்டுகள் தூரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள இந்த நட்சத்திரத்தின் வயது 1 லட்சம் ஆண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது. அதனை ஒருவிதமான வாயு மண்டலம் சூழ்ந்துள்ளது. இந்த வாயுக்கள் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் அணுக்கள் என தெரியவந்துள்ளது. இந்த ஆக்ஸிஜனும் ஹைட்ரஜனும் ஆயிரக்கணக்கான டிகிரி செல்ஸியஸ் வெப்ப நிலையில் தண்ணீராக மாறுவதாக மேலும் ஆய்வில் கண்டறியபட்டுள்ளது. இந்த தண்ணீர், நட்சத்திரத்தின் துருவங்கள் வழியே வெளியேறும் போது 1 லட்சம் டிகிரி செல்சியஸ் வெப்பத்தை எட்டி வாயு நிலையை அடைகிறது. சுற்றியுள்ள வாயு மண்டலத்தில் மோதி, விரைவில் குளிர்ந்து மீண்டும் திரவ நிலையை அடைகின்றது. அமேசான் நதி 1 வினாடியில் எந்த வேகத்தில் பாய்கிறதோ அதைப்போல 100 மில்லியன் மடங்கு அதி வேகத்தில் தண்ணீரை சிதறியடிக்கிறது இந்த நட்சத்திரம் என்னும் ஆச்சரியமான உண்மையையும் இந்த குழுவினர் கண்டறிந்துள்ளனர். அதாவது, அதன் வேகம் மணிக்கு 2 லட்சம் கி மீ அல்லது ஒரு எந்திர துப்பாக்கியின் குண்டுகள் சீறிப்பாயும் வேகத்தைப்போல் 80 மடங்கு ஆகும்.
10 ஆயிரம் வருடங்களில் 10 சதவீதம் சுருங்கிய மனித மூளை
மனிதன் தனது மூளையை பயன்படுத்தி இயற்கையை பல்வேறு வழிகளில் தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறான். ஆனால் தற்போது, இங்கிலாந்து நாட்டிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தின் பேராசிரியர் மார்தா லார் என்பவர் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் கிடைத்த கற்கால மனிதர்களின் மண்டை ஓடு படிவங்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் கடந்த 10 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் மூளையை விட தற்கால மனிதர்களின் மூளையளவு 10 சதவீதம் சுருங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. கிரோ-மேக்னன் என்றழைக்கப்படும் அவர்களின் மூளையளவான 1,500 கன செ.மீ.லிருந்து நவீன மனிதர்களின் மூளையளவு 1,350 கன செ.மீ. ஆக சுருங்கியுள்ளது. இதற்கு, இக்காலத்தில் மேற்கொள்ளப்படும் உணவு பழக்க வழக்கம், நகரமயமாதலால் ஏற்படும் ஆரோக்கிய சீர்கேடுகள் மற்றும் பரவி வரும் வியாதிகள் ஆகியவை காரணமாக கூறப்படுகிறது. எனினும் இன்றைய மனிதர்களின் அறிவு வளர்ச்சி மேலோங்கி இருக்கிறது என்பதில் எந்த மாற்றமுமில்லை என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
மரபணு மாற்றிய அரிசியை 10 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பயன்படுத்திய குகை மனிதர்கள்

ஜப்பான் நாட்டின் கோப் பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் யமசகி தலைமையில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில், தற்போது மரபணு மாற்றம் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் காய்கறிகள், தானியங்கள் போன்றவற்றிற்கு முன்னோடியாக ஏறத்தாழ 10 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே குகை மனிதர்கள் இந்த பணியை செய்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. அரிசியில் காணப்படும் எஸ்.டி.1 என்ற ஒரு வகை மரபணுவை உருமாற்றம் செய்து பயிர்செய்து பயன்படுத்தி வந்துள்ளனர். மரபணு மாற்றத்திற்கு பின்பு செடியின் தண்டு மிக சிறியதாகவும், அதிக விளைச்சல் தருபவனவாகவும் அமைந்தது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் நவீன மரபணு மாற்றத்திற்கு உட்படுத்தப்படும் அரிசி வகையில் எஸ்.டி.1 பெரும் பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
2013ல் ஏற்படும் சூரிய புயலால் பூமிக்கு ஆபத்து

அமெரிக்க நாட்டின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல அமைப்பின் உதவி செயலாளரான காத்ரின் சுல்லிவன் என்பவர் 2013-ஆம் ஆண்டில் சூரிய புயலால் பூமியில் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். 11 வருட இயற்கை சுழற்சியில் சூரியன் அதிக பலம் பெறும் அந்த ஆண்டில் இந்நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. முதன்முதலாக கடந்த 1859ஆம் ஆண்டு இங்கிலாந்து வானியலாளர் ரிச்சர்ட் கேரிங்டன் என்பவர் சூரிய புயலை கண்டறிந்தார். சூரியனில் ஏற்படும் மிக பெரும் வெடிப்பால் சூரிய புயல் உண்டாகிறது. இதன் மூலம் எக்ஸ் கதிர்கள் மற்றும் புற ஊதா கதிர்கள் ஆகியவை பெருமளவில் வெளிப்படும். இவை பூமியின் காந்த புலத்தினை அதிகமாக பாதிக்கும் வலிமை கொண்டது. எனவே, இங்குள்ள கணினியின் செயல்பாடுகளில் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பாதிப்பு ஏற்படும். குறிப்பாக வானொலி அலைவரிசையில் பாதிப்பு, செயற்கைகோள் தகவல் தொடர்புகள் மற்றும் வரைபட வழிகாட்டி ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. 20-ஆம் நூற்றாண்டில், அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலத்தில் 1972-ஆம் வருடம் தகவல் தொடர்பில் பாதிப்பு மற்றும் 1989-ஆம் வருடம் கனடா நாட்டின் கியூபெக் மாகாணத்தில் மின்சார பரிமாற்ற பணிகளில் பாதிப்பினை ஏற்படுத்தி இருளில் மூழ்க செய்தது போன்ற தாக்கத்தை ஏற்படுத்தியதில் சூரிய புயல் பெரும் பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.
ஆழமான நிலப்பரப்பில் வாழும் உயிரினம் கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் அமைந்துள்ள பிரின்ஸ்டன் பல்கலைகழகத்தை சேர்ந்த டல்லிஸ் ஆன்ஸ்டாட் என்பவர் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் நிலப்பரப்பில் மிக ஆழமான பகுதியில் வாழும் உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் உள்ள தங்க சுரங்கத்தில், ஏறக்குறைய ஒரு மைல் ஆழத்தில் வாழும் நெமடோடு என்னும் வகையை சேர்ந்த கொக்கி புழுவே அந்த உயிரினம் ஆகும். இதன் அறிவியல் பெயர் ஹேலிசெபலோபஸ் மெபிஸ்டோ. பொதுவாக, பயோஸ்பியர் எனப்படும் பூமியின் ஆழமான பகுதியில் வெப்பநிலை வேறுபாடு, குறைந்தளவு ஆக்சிஜன் மற்றும் இடப்பற்றாக்குறை ஆகிய மாறுபட்ட சூழ்நிலையில் காணப்படும் இவ்வுயிரினம், தான் உண்ணும் பாக்டீரியாவை போன்று 10 லட்சம் மடங்கு பெரியது என கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை அறிவியலாளர்கள் நான்கு வகையான கொக்கி புழுக்களை கண்டறிந்துள்ளனர். 4.6.2011
சார்ஜ் செய்து கொள்ளும் வசதி கொண்ட நவீன பிகினி ஆடை
மேலை நாடுகளில் சூரிய குளியல் மிக பிரபலமானது. ஆண், பெண் வேறுபாடின்றி மிக குறைந்த ஆடையில் சூரியக்கதிர்கள் விழும் கடற்கரை மணற்பரப்பின் மீது ஓய்வாக படுத்திருப்பர். இதனால் சூரியனிலிருந்து நேரடியாக வைட்டமின் டி கிடைப்பதுடன் தங்களை உற்சாகப்படுத்தி கொள்வதற்கும் இதனை அவர்கள் மேற்கொள்கின்றனர்.இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த ஆன்ட்ரூ ஸ்னீடர் என்பவர் புதிய முயற்சியாக சூரிய குளியல் எடுத்து கொள்வோர்களுக்கென்று பிகினி உடையை தயாரித்துள்ளார். அதிலிருந்து கேமெரா, ஐ&பாட் உள்பட பல்வேறு மின்னணு கருவிகளை சார்ஜ் செய்து கொள்ள முடியும். ஒரு பிகினி உடையை தயாரிப்பதற்கு ஏறத்தாழ 80 மணி நேரங்களாகும். இந்த உடையில் சூரிய ஒளியை ஆற்றலாக மாற்றும் கருவிகளும் மற்றும் கடத்திகளும் இணைக்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்துவோர் உடலில் ஈரமில்லாமல் காய்ந்த நிலையில் இருக்க வேண்டுமென்பது மட்டும் அவசியம். பிகினி பெண்களுக்குரியது என்னும் நிலையில் ஆண்களுக்கான ஆடையை தயாரிக்கும் முயற்சியிலும் ஸ்னீடர் ஈடுபட்டுள்ளார். 3.6.2011
தாம்பத்ய இன்பத்தில் மூளையின் பங்கு: ஆய்வில் புதிய தகவல்
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் அமைந்துள்ள ரட்ஜர்ஸ் பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் பேரி கோமிசருக் என்பவரின் தலைமையில் பெண்கள் தாம்பத்யத்தின் போது அடையும் இறுதிநிலை இன்பம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக பெண்கள் சிலரை வரவழைத்து அவ்வாறு இன்பம் பெறுவது போன்று கற்பனை செய்யும்படி கேட்டு கொள்ளப்பட்டனர். பின்னர் அவர்களின் மூளை பகுதிகள் தனியாக எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கொண்டு படம் பிடிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அந்த ஆய்வில், முடிவெடுக்கும் பகுதி, அவசர நிலையில் செயல்படுதல் மற்றும் கற்பனை திறன் ஆகிய செயல்பாடுகளுக்கான பகுதியாக விளங்கும் ப்ரிப்ரன்டல் கார்டெக்ஸ் (பி.எப்.சி.) உள்பட மூளையின் 30 பாகங்கள் எழுச்சி பெற்று பெண்களின் இன்பத்தின்போது உறுதுணையாக இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், தனிமையில் இருக்கும்போது மேற்குறிப்பிட்ட பாகங்களில் ஒன்று தாம்பத்ய இன்பம் பற்றி கற்பனையை வளர்த்து அதன் வழியே திருப்தியடைவதாகவும், ஆடவன் துணையுடன் தாம்பத்யத்தில் ஈடுபடும் போது மற்ற பாகங்கள் எழுச்சி பெறுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மனிதர்களின் உடலியல் உணர்வுகளான வலி, மகிழ்ச்சி போன்றவற்றை பற்றி ஆராய்ந்து தெளிவு பெறும் நோக்கத்துடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செவ்வாயில் உயிரினங்கள் பற்றி அறிய நாசாவின் புதிய விண்கலம்

அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்திற்கு கியுரியாசிட்டி என்ற பெயரிலான விண்கலம் ஒன்றை அனுப்ப திட்டமிட்டுள்ளனர். இதற்கு முன்னர் செவ்வாயின் சுற்றுவட்ட பாதையில் வலம் வந்து படங்களை எடுத்து அனுப்பி கொண்டிருந்த பீனிக்ஸ் விண்கலம் பழுதடைந்ததை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விண்கலம் சென்று இறங்குவதற்காக பட்டியலிடப்பட்ட 60 இடங்களிலிருந்து குறிப்பாக 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவை மாவ்த் வேலிஸ், கேல் கிரேடர், ஹோல்டன் கிரேடர் மற்றும் எபெர்ஸ்வேல்ட் ஆகியவை ஆகும். இதற்கு முன் அங்கே நுண்ணுயிரிகள் ஏதும் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்ய ஏற்ற வகையில் புதிய தொழில்நுட்பங்கள் கொண்டு விண்கலமானது தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக குளிர் நிறைந்த பகுதியிலும் பணிபுரிதல், வெகு விரைவாக வேகத்தை கட்டுப்படுத்தும் திறன் மற்றும் மிக குறைந்த பரப்பளவுள்ள இடத்தில் தன்னை நிலைநிறுத்தி கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.
49 ஆண்டுகளாக மரணத்தோடு போராடும் ஹாகிங்: சொர்க்கம் என்பது அழகிய கதை என்கிறார்

இங்கிலாந்து நாட்டின் புகழ் பெற்ற அறிவியலாளர் ஸ்டீபன் ஹாகிங். தனது 21 வயதில் நரம்பு செல் வியாதியால் பாதிக்கப்பட்டு கடந்த 49 வருடங்களாக வாழ்க்கையில் போராடி வருகிறார். கதிரியக்கத்தை உமிழும் கருப்பு துளைகள் பற்றிய இவரது இயற்பியல் கருத்துகள் மகுடம் சூட்டும் சாதனைகளாகும். இவர், மரணத்தை பற்றிய தனது எண்ணங்கள் பற்றி கூறுகையில், கடந்த 49 வருடங்களாக மரணத்தோடு தான் போராடி வருகிறேன். எனவே, மரணத்தை கண்டு பயமில்லை. ஆனால் இறப்பதற்கு நான் அவசரப்படவில்லை. நான் விரும்பியவற்றை செய்வதற்கென்று நிறைய விசயங்கள் உள்ளன. எனது மூளையை பல பாகங்கள் அடங்கிய ஒரு கணினியாகவே கருதுகிறேன். அப்பாகங்கள் பழுதடையும் பொழுது கணினி (மூளை) ஆனது அதன் செயலை நிறுத்தி விடுகிறது. இருளை கண்டு பயப்படுகிற மக்களுக்கென்று கூறப்படுகிற அழகிய கதையான மரணத்திற்கு பின் வாழ்வு அல்லது சொர்க்கம் என்பது பழுதடைந்து முடிந்து போன கணினிகளுக்கு கிடையாது என்கிறார்.
கல்லீரல் சிகிச்சைக்கு பயன்படும் புதிய ஸ்டெம் செல் சிகிச்சை முறை
மருத்துவ உலகில் ஒரு சாதனையாக கருதப்படுவது ஸ்டெம் செல் சிகிச்சை முறை. செல்லின் அடிப்படை பண்புகளை கொண்டிருப்பதோடு வேறு எந்த செல்லாகவும் மாற்றம் பெற்று வளர்ச்சியடையும் தன்மை வாய்ந்த ஸ்டெம் செல்கள் பெரும்பாலும் கருப்பகுதியிலிருந்து பிரித்தெடுத்து உருவாக்கப்படும் நிலையில் தற்போது தோல் மற்றும் இரத்த செல்களில் இருந்து ஸ்டெம் செல்லானது உருவாக்கப்பட்டு கல்லீரல் செல்களாக மாற்றப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் உடலிலிருந்தே பல லட்சக்கணக்கான எண்ணிக்கையில் எளிதான முறையில் உருவாக்கப்படும் பக்கவிளைவுகள் அற்ற இத்தகைய செல்களை தூண்டுவிக்கப்பட்ட புளுரிபொடென்ட் ஸ்டெம் செல் (ஐ.பி.எஸ்.சி.) என அழைக்கின்றனர். பாதிக்கப்பட்ட இடத்தில் புதிய உறுப்பாக வளரும் அளவிற்கு தன்மை கொண்ட இந்த ஸ்டெம் செல்கள் குறித்து மேரிலேண்டில் அமைந்துள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கிம்மல் புற்றுநோய் மையத்தின் பேராசிரியர் யூன்&யங் ஜேங் என்பவர் கல்லீரல் பாதிப்படைந்தவர்களுக்கு சிகிச்சை செய்வதற்கும் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சை பெறுபவர்களுக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார். 12.5.2011
கடவுள் நம்பிக்கை மனிதர்களிடம் அதிகமாக உள்ளது: ஆய்வு முடிவு

இங்கிலாந்து நாட்டில் இப்சோஸ் நகரில் அமைந்துள்ள சமூக ஆராய்ச்சி அமைப்பானது கடவுள் நம்பிக்கை குறித்து ஓர் ஆய்வு மேற்கொண்டது. அதில் 23 நாடுகளை சேர்ந்த 18,829 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 51 சதவீதம் பேர் மரணத்திற்கு பின் வாழ்வு இருக்கிறது என நம்புகின்றனர். அதே வேளையில் 18 சதவீதம் பேர் கடவுள் நம்பிக்கை இல்லை என்றும் 17 சதவீதம் பேர் எதை நம்புவது என தெரியவில்லை என்றும் தெரிவித்தனர். இந்தோனேசியா, துருக்கி மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டுள்ளனர். இந்தியாவில் 24 சதவீதம் பேரும், சீனாவில் 14 சதவீதம் பேரும் மற்றும் ரஷ்யாவில் 10 சதவீதம் பேரும் பல்வேறு கடவுள்களின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். கடவுளை நம்பாதவர்கள் வரிசையில் 40 சதவீதம் பேர் பிரான்சு, சுவீடன், பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் வருகின்றனர். மேலும், மறுபிறப்பின் மீது ஹங்கேரி நாட்டினர் அதிகமாக நம்பிக்கை வைத்திருக்கின்றனர். அவர்களில் சுமார் 13 சதவீதம் பேர் மறுபிறப்பில் நம்பிக்கை கொண்டுள்ளனர். கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற ஆராய்ச்சி ஒருபுறம் நடந்து கொண்டிருக்க கடவுள் நம்பிக்கையும் மனிதர்களிடம் பரவலாக காணப்படுகிறது என்பது ஆராய்ச்சியிலிருந்து தெரிய வருகிறது. 26.4.2011
ஆஸ்திரேலியாவில் உருவாகும் உலகின் மிக பெரிய தொலைநோக்கி மெகல்லன்

ஆஸ்திரேலிய நாட்டின் கேன்பெரா நகரில் அமைந்துள்ள ஆஸ்திரேலிய தேசிய பல்கலைகழகத்தின் விஞ்ஞானிகள் இன்டர்நேஷனல் கன்சார்டியத்துடன் இணைந்து உலகின் மிக பெரிய தொலைநோக்கி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஹப்பிள் தொலைநோக்கியை காட்டிலும் 10 மடங்கு துல்லியமாக படங்களை காட்டும் திறன் பெற்ற இதற்கு மெகல்லன் என பெயரிடப்பட்டுள்ளது. பூமியிலிருந்து 12.5 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில், விண்வெளியில் உள்ள எந்த ஒரு பொருளையும் பற்றி ஆராய்வதற்கு ஏற்ற வகையில் இது இருக்கும். ஏறத்தாழ 700 மில்லியன் அமெரிக்க டாலர் பொருட்செலவில் தயாராகும் இத்தொலைநோக்கி பற்றி ரிசர்ச் ஸ்கூல் ஆப் அஸ்ட்ரானமி அண்ட் அஸ்ட்ரோபிசிக்ஸின் இயக்குநரான ஹார்வே பட்சர் என்பவர் கூறும்போது, "புதிய தொழில்நுட்பத்துடன் உருவாகும் மெகல்லன், விண்வெளியின் பல அரிய விசயங்களை பற்றி அறிந்து கொள்வதற்கு உதவும். மேலும், 6 அல்லது 7 பில்லியன் வருடங்களுக்கு முன்பு பால்வெளிவீதி எவ்வாறு இருந்தது என்பதை பற்றியும் அறிந்து கொள்ள முடியும்" என்று கூறினார். வரும் 2018& ஆம் ஆண்டில் இந்த தொலைநோக்கி முழு வடிவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 19.4.2011
உலக மொழிகளின் பிறப்பிடம் ஆப்பிரிக்கா: ஆய்வில் தகவல்

ஆஸ்திரேலிய நாட்டில் அமைந்துள்ள குயின்ஸ்லாண்ட் பல்கலைகழகத்தின் ஆய்வாளர் குயென்டின் அட்கின்சன் என்பவர் தலைமையில் முதன்முதலில் மொழியானது எங்கு தோன்றியது என ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்க கண்டத்தில் வாழ்ந்த கற்கால மனிதர்களின் பேச்சில் இருந்து தான் தற்போது பரவலான மக்களால் பேசப்படும் மொழிகளான ஆங்கிலம், வங்காளம், ஜப்பான் மற்றும் இந்தி உட்பட உலகின் பல்வேறு மொழிகளும் தருவிக்கப்பட்டுள்ளன என தெரிய வந்துள்ளது. இந்த ஆய்விற்காக அட்கின்சன், உலகளவில் பேசப்படும் 504 மொழிகளை எடுத்து கொண்டார். அந்த மொழிகளில் பயன்படுத்தப்படும் உச்சரிப்புகள் மற்றும் வெவ்வேறு சப்தங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தார். ஆய்வில், மொழியானது ஏறத்தாழ 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே பேசப்பட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், தற்காலத்தில் வாழும் மனிதர்கள் சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவை மையமாக கொண்டு வாழ்ந்துள்ளனர். பின்னர் 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருந்து உலகின் பல இடங்களுக்கும் பரவி வாழ ஆரம்பித்துள்ளனர். அதிக மக்கள் தொகை கொண்டவர்கள் ஓரிடத்தில் நிலையாக இருந்து வாழ்ந்த போது அங்கு பேசப்பட்ட மொழியும் நிலைத்துள்ளது. அதுவே, சிறு சிறு குழுக்களாக மக்கள் பிரிந்து செல்லும் போது அவர்களின் இடையே பேசப்பட்ட மொழி காலப்போக்கில் மாற்றம் பெற தொடங்கியது. தலைமுறைகள் மாற மாற மொழிகளும் மாற்றம் பெற்றுள்ளன. அதில், ஆப்பிரிக்காவில் ஆரம்பகாலத்தில் பேசப்பட்ட மொழியின் சப்தங்கள் மற்றும் உச்சரிப்புகள் ஆகியவை படிப்படியாக மறைந்து போயுள்ளன என அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது